திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Jun 19, 2025 10:18 AM GMT
Report

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அருகே வசிட்ட முனிவர் வழிபட்ட திட்டக்குடி சிவன் கோவில் உள்ளது. இப்பகுதி முன்பு வேங்கை மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்ததால் வேங்கை வனம் என்றும், அம்மன் வேங்கைவன நாயகி என்றும் அழைக்கப்படுகின்றாள். கோவில் கருவறையில் வைத்தியநாதரும் என்ற தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாகக் காட்சியளிக்கின்றார்.

நாயகியாக அசனாம்பிகை தனிச் சன்னதி கொண்டுள்ளார். (அசனம் என்றால் வேங்கை மரம்). சூரியன், இந்திரன், வசிட்ட முனிவர், இராமன், பிரம்மன் ஆகியோர் வழிபட்டு அருள் பெற்ற கோவிலாகும். இரண்டு  திருமணங்கள் நடந்த ஸ்தலம் என்பதால் இக்கோவில் திருமணத் தடை நீக்கும் கோவிலாகவும் போற்றப்படுகிறது.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் | Thittakudi Sri Vaidyanathar Temple

 வித்யாரண்யபுரம்

இங்கு ஞான சரஸ்வதி சந்நிதி உள்ளது. பிரம்மதேவனுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தை சிவபெருமான் உபதேசித்த தலம் என்பதால் இத்த திருத்தலத்திற்கு வித்யாண்யபுரம் என்றும் பெயர்.  

கோயில் அமைப்பு

  இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஐந்து நிலை கோபுரங்களைக் கொண்டது மற்ற சிவன் கோவில்களில் இருப்பதைப் போல 63 சிலைகள் வரிசையாக உள்ளன சைவ சமய குறவர்கள் காணப்படுகின்றனர் நாகர் சிலைகள் உள்ளன திருச்சுற்று தெய்வங்கள் கோவிலின் திருச்சுற்றில் கருவறையை சுற்றி வரும் போது விநாயகருக்கு தென்மேற்கில் தனி சன்னதி உண்டு சனி பகவானுக்கு தனிச் சன்னதி உண்டு.

சோமாஸ்கந்தரும் தனிச் சன்னதியில் காட்சியர் அருள்கின்றார் சன்னதி உள்ளது வடக்கில் ஈசானியத்தில் வடகிழக்கு ஈசானிய மூலையில் ஈசானிய லிங்கம் காட்சியளிக்கின்றது இப்பகுதியில் காலபைரவருக்கும் தனிச் சன்னதி உள்ளது நவக்கிரக சந்நிதி தனியாக உள்ளது அம்மன் சன்னதி இயலும் விநாயகர் முருகன் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன

. கல்லால் ஆகிய திருவாச்சி மற்றும் மயிலுடன் காணப்படும் தனி முருகன் அருகில் தனித்தனி வள்ளி தெய்வானை சிலைகள் 14ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதி செய்கின்றன சனி விநாயகர் சன்னதியில் இருக்கும் தனி விநாயகரும் பிற்காலத்தில் கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டபோது உருவாக்கப்பட்ட சிலையாகும்

  அடுத்தது வைத்தியநாதர் திட்டக்குடி கோவிலின் கருவறை நாதருக்கு வைத்தியநாதன் என்ற ஒரு பெயரும் உள்ளது சிவன் கோவிலாக ஒரு பெறுவதற்கு முன்பு பௌத்த கோவிலாக இருந்திருக்க கூடும் என்ற அப்போது இங்கு அக்காலகட்டத்தில் இங்கிருந்த பௌத்த மடாலயத்தில் வைத்திய சேவை நடைபெற்றிருக்க வேண்டும்.

அவலோகத்தீஸ்வரர் அல்லது மருத்துவ புத்தருக்கு புத்தரை மக்கள் வைத்தியநாதன் என்று அழைத்திருப்பார்கள் சைவ சமய பேரொளிக்குப் பின்பு சிவன் கோவில்கள் எழுப்பப்பட்டபோது பழைய பெயரும் தொன்று தொட்டு தொடர்ந்து வருகின்றது அறியலாம்.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் | Thittakudi Sri Vaidyanathar Temple

வேங்கைவனம்

மடாலயங்கள் எழுப்பப்பட்ட காலத்தில் ஒரே மரம் வளர்க்கும் வனங்கள். உருவாக்கப்பட்டன தில்லைவனம், கடம்பவனம், முல்லைவனம், மூங்கில் வனம்  போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

இயற்கையில் ஒரே மரங்கள் ஒரு இடத்தில் மொத்தமாக வளர்வது கிடையாது. பல வகை மரங்களும் கலந்து சோலையாகக் காட்சியளிக்கும். ஒரு இடத்தில் இருக்கும் பலவகை மரங்களை வெட்டி விட்டு அந்த நிலத்தைப் பண்படுத்தி ஒரே வகை மரத்தை வளர்ப்பது மனிதனின் முயற்சி ஆகும். அவ்வாறு இங்கு வேங்கை மரங்கள் மட்டும் வளர்க்கப்பட்டன.

  வேங்கைவன நாயகி

ஆதியில் இங்கிருந்த வேங்கை வனத்தின் நாயகியாக ஆக விளங்கிய அம்மன் இன்று சிவனின் உடனுறை நாயகியாகத் தனிச் சந்நிதி கொண்டுள்ளாள். கிழக்கு முகமாக பெரிய சிலையாக அம்மன் காட்சி தருகின்றாள். இவளுக்கு  எலுமிச்சம் பழ மாலை சாற்றப்படுகின்றது.

எலுமிச்சம்பழம் மாலை சக்தி உள்ள தனிப் பெண் தெய்வங்களுக்கு மட்டும் அணிவிக்கப்படுமே தவிர சிவபெருமானின் மனைவியாக விளங்கும் உமையாளுக்கு அணிவிக்கப்படுவதில்லை. தனி துர்க்கைக்கு எலுமிச்சம்பழம் மாலை அணிவிக்கப்படும்.

சமய  நடைமுறையில் எலுமிச்சம் பழம் மாலை துடியான பெண் தெய்வங்களுக்கு மட்டுமே அவர்களின் கோபம் தணிவிப்பதற்ககாக அணிவிக்கப்படுகிறது. பிற்காலத்தில் இந்த அம்மனை சிவனின் மனைவியாகத் தல புராணக் கதைகளை மாற்றினாலும்  மக்கள் பழைய பழக்க வழக்கங்களையும் சமய நடைமுறைகளையும் இன்றும்  தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

அம்மன் தனிப்பெரும் தெய்வம்

அம்மன் சந்நிதிக்கென்று தனி கோபுரமும் கொடி மரமும் உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் அம்மன் சமயபுரம் மாரியம்மன், புன்னைநல்லூர் மாரியம்மன் போல மிகப் பெரிய ஒரு உருவில் காட்சி அருள்கின்றாள்.

எனவே இது இக்கோவில் பழைய பௌத்த மடாலயம் என்றும் இவள் பழைய பெண் மருத்துவ புத்தர் என்றும்  கருதலாம். சிவபெருமான் இங்கு எழுந்தருளி பார்வதியைத் திருமணம் செய்து கொண்டதாக ஸ்தலபுராணக்கதை கூறினாலும்  இங்கு எழுந்தருளியிருக்கும் அசனாம்பிகை தனித் தெய்வமாக விளங்குகிறாள் என்பதே உண்மை.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் | Thittakudi Sri Vaidyanathar Temple

  லிங்கங்கள்

பக்தி இயக்கக் காலத்தில் சைவ சமயம் புதிய கோவில்களை சிவனுக்கு எழுப்பியும் புதிய தல வரலாறுகளை சிவனுக்காகக் கட்டமைத்தும் புதிய பதிகங்கள் மற்றும்  புராணங்கள் பாடியும் சைவத்தை வெகு தீவிரமாக வளர்த்தது. அக்காலகட்டத்தில் சிவன் கோவில்களில் சிவலிங்கங்களின் எண்ணிக்கையும் பெருகின.

எங்கும் நிறைந்திருப்பவன் சிவனே என்பதை உணர்த்தும் வகையில் பஞ்சபூதலிங்கங்கள், அஷ்ட லிங்கங்கள், சகஸ்ரலிங்கம் சதாசிவம் (நூறு முகங்கள் கொண்ட சிவபெருமான்) முனி பத்தினிகளின் நிறை அழித்த பிச்சாடனார் சிலைகள் ஆகியவை ஒவ்வொரு சிவன் கோவிலிலும் இடம்பெற்றன.

அஷ்ட லிங்கங்கள் வெகு சில கோவில்களில் மட்டும் இடம் பெற்றன.  இக்கோவிலில் அஷ்ட திசைகளுக்கும் உரிய அஷ்ட லிங்கங்கள் காணப்படுகின்றன.

ஊர்ப் பெயர் காரணம்

வசிட்ட முனிவர் இறைவனை வணங்கிய தலம் என்பதால் இவ் ஊருக்கு வசிட்ட குடி என்றும் வதிட்டகுடி என்றும் திருவதிட்ட குடி என்றும் பெயர் கூறுகின்றனர்.  திருவதிட்டகுடி, திட்ட குடியாக மாறியது என்ற காரணம் கூறுவது பொருத்தமாக இல்லை.

திட்டை என்றால் ஆற்றுக்கு நடுவில் காணப்படும் மணல் திட்டு.  இக்கோவில் வெள்ளாற்றின் நடுவே ஓர் மணல் திட்டில் அமைந்திருப்பதால் திட்டை குடி என்பது பொருத்தமான பெயராகும். திட்டை குடி என்பதே முதலில் வைக்கப்பட்ட பெயராகும். வசிட்டர் கதை சேர்க்கப்பட்ட பின்பு வசிட்ட குடி என்று பெயர் புதிதாக சேர்த்திருப்பர்.

வசிட்டரும் அருந்ததியும்

வசிட்ட முனிவருக்கும் அருந்ததிக்கும் தனிச் சிலைகள் இக்கோவிலுக்குள் உள்ளன. இவர்களின் தோற்றம் காலத்தால் பிந்தியதாகும் அருந்ததி சிலையின் இடது பக்க மாம்பழக் கொண்டை நாயக்கர் காலத்தது ஆகும்.

வசிட்ட முனிவருக்கு தலைக்கு மேல் உச்சியில் வட்ட வடிவில் காணப்படும் சடாமுடி பிற்காலத்திய வடிவத்தது என்பதை  உறுதி செய்கின்றது .மதுரையில் ஜடாமுனி கோவில் தெருவில் இருக்கும் ஜடாமுனிஸ்வரன் உருவமும் இக்கோவிலில் காணப்படும் வசிட்டரின் உருவமும் ஒன்று போல உள்ளது.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் | Thittakudi Sri Vaidyanathar Temple

கதை ஒன்று
தான்தோன்றிச்வரர் கதை

வசிட்ட முனிவர் தன் தவ பலத்தால் காமதேனுவை பூலோகத்துக்கு வரவழைத்தார். ஒரு நாள் காமதேனு கால் தவறி ஒரு புற்றை மிதித்து விட்டது. மிதிபட்ட புற்றிலிருந்து இரத்தம் வடிந்ததைக் கண்டதும் அஞ்சி நடுங்கிய காமதேனு அந்தப் புற்றின் மீது பால் சொரிந்தது. பால் சொரிந்ததால் இரத்தம் நின்றுவிடும் என்பது காமதேனுவின் கருத்தாகும்.

ஆனால் காமதேனு பால் சொரிய சொரிய புற்று கரைந்து உள்ளே இருந்த ஒரு லிங்கம் வெளிப்பட்டது. அப்போது  அங்கு வந்த மனுசக்கரவர்த்தி அதே இடத்தில் அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒரு சிவன் கோவிலை எழுப்பினார்.

காமதேனுவைத் தன் தவபலத்தால் இங்கு வரவழைத்த வசிட்ட முனிவரிடம் தன்னுடைய சூரிய வம்சத்துக்குக் குலகுருவாக இருக்கும் படி வேண்டினார். வசிட்டமுனிவரும் சம்மதித்தார். மனுசக்கரவர்த்தி அந்த சிவன் கோவிலில் வசிட்டருக்கும் அவர் மனைவிக்கும் சிலை எழுப்பினார் .

 கதை இரண்டு
இந்திரன் சாபம் தீர்த்த கோவில்

  பௌத்த கோவில்கள் மடாலயங்கள் சிவன் கோவில்களாக மாற்றப்பட்ட போது பௌத்தர்களின் பெருமதிப்பு பெற்ற இந்திரனை சாபம் பெற்றவனாகக் கதை சொன்னது சைவசமயப் பிரச்சார   நடைமுறைகளில் ஒன்றாகும். அத்தகைய கதை ஒன்று இத்தலத்திலும் வழங்குகின்றது.  

கௌத முனிவரின் பத்தினியான அகலிகையின் நிறையழித்த இந்திரனுக்கு உடல் முழுக்க பெண் யோனி உருவம் தெரியும்படி முனிவர் சபித்தார்.  இந்திரன் கௌதம முனிவரிடம் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு அழுதபோது 'அவை மற்றவர்களுக்குக் கண்களாகத் தெரியட்டும்' என்று கூறினார்.

எனவே ஆயிரம் கண் கொண்டவனாக இந்திரன் மற்றவர்களுக்கு காட்சி அளித்தான். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற அவன் சிவபெருமானை நாடினான். சிவபெருமான் திட்டைக்குடியில் தவமிருக்கும் படி ஆணையிட்டார்.  இத் திருத்தலத்திற்கு வந்து அவன் நீண்ட நாள் தவமிருந்து சிவனருளால் சாபம் நீங்கி விமோசனம் பெற்றான்.

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் | Thittakudi Sri Vaidyanathar Temple

பிணியும் சாபமும் அகலுமிடம்

இந்திரன் சிவபெருமானிடம் தன்னைப்போல் தவறு செய்து தண்டனை பெற்றவர்கள் நோயற்றவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டால் அவர்களின் நோயும் சாபமும் தீர வேண்டும் என்று வரம் வேண்டினான். சிவபெருமானும் அவன் வேண்டும் வரத்தைக் கொடுத்தருளினார்.

எனவே இறைவன் அடியவரின் நோயும் சாபமும் தீர்க்கும் வைத்தியநாதராக இங்கு எழுந்தருளியுள்ளார். இரண்டாம் குலோத்துங்க சோழன் பார்வை இழந்து இருந்தபோது இக்கோவிலுக்கு வந்து பார்வை பெற்றான் என்ற வரலாற்றுச் செய்தியும் இக்கோவிலின் வைத்திய மகிமையை சுட்டிக்காட்டுகின்றது.

கதை 3
401 பேர் கல்யாணக் கதை

வசித்த முனிவர் தன்னுடன் 400 பெண்களை அழைத்துக் கொண்டு வந்து இந்த திட்டைக்குடியில் இருந்தார். அவர்கள் பருவமடைந்ததும் அவர்களுக்கு தக்க மணமகன்களைப் பார்த்துத் திருமணம் செய்தார்.

அவர்களுடன் 401 வது பெண்ணாக இருந்த பார்வதி தேவிக்கு மட்டும் பொருத்தமான மணமகன் கிடைக்கவில்லை. வசிஷ்ட முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் தானே வந்து பார்வதி தேவியைத் திருமணம் செய்துகொண்டார்.

பித்ரு தோஷத்தில் இருந்து நிவர்த்தி அளிக்கும் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில்!

பித்ரு தோஷத்தில் இருந்து நிவர்த்தி அளிக்கும் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில்!

நா நூற்றொருவர் பெருமாள் கோவில்

401 பெண்கள் திருமணக் கதைக்கு அரண் சேர்க்கும் வகையில் திட்டக்குடியில் நானூற்று ஒருவர் கோவில் என்ற பெயரில் சுகாசனப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அமர்ந்த காலம் நின்ற கோலம் சயன கோலம் என்ற மூன்று நிலையிலும் பெருமாள் காணப்படுகின்றார். இக்கோவிலுக்கான கதையிலும் 400 பெண்களுக்கு தங்கள் சீடர்களை திருமணம் செய்து வைத்த கதை கூறப்படுகின்றது

அடுத்து 401 வதாக ஒரு பெண் திருமணத்துக்காக நின்று கொண்டிருக்கிறாள்.  இனி யாரை இந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பது என்று அவர்கள் கலங்கியபோது இதோ நான் ஒருவன் இருக்கிறேன் என்று எம்பெருமான் வந்து அவளை திருமணம் செய்கிறார். அவளும் மகிழ்ந்து போகிறாள்.

எனவே இங்கு எழுந்தருளியிருக்கும் நாச்சியார் நித்யகல்யாணி என்றும் மகிழ்ந்தவல்லி தாயார் என்றும் அழைக்கப்படுகிறாள். இதனை இத்திருத்தலமும்  திருமண திருத்தலமாக விளங்குகிறது.   கௌதம புத்தருக்கும்  நின்ற , அமர்ந்த, கிடந்த கோலங்களில் சிலை செய்யும் பழக்கம் பௌத்த மடாலயங்களில் இருந்துள்ளது. 

எனவே இவ்விடம் பழைய பௌத்த மடாலயம் என்று கருதவும் இங்கு 400 பௌத்த துறவிகளும் அவர்களுக்கு தலையாய துறவியாக கௌதம புத்தர் 401 வது துறவியாக இருந்தார் என்றும் கருதுவதற்கும் இடம் உள்ளது.

பௌத்தம் அழிந்ததும் அதே தலத்தில் ஒரு பக்கம் சிவன் கோயிலுக்கு மறு பக்கம் பெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. இரண்டும் ஒரே திருமணக் கதையைத் தங்கள் வழிபடு தெய்வத்துக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றி வழங்குகின்றனர்.  

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் | Thittakudi Sri Vaidyanathar Temple 

திருமண தோஷம் போக்கும் தலம்

திட்டக்குடி வைத்தியநாதர் திருக்கோவிலில் சிவபெருமான் மணமகனாக தோன்றி பார்வதியை திருமணம் செய்ததாக தலபுராணம் கூறுகின்றது. இங்கு வசிட்டருக்கும்  அருந்ததிக்கும் திருமணம் நடந்ததாக ஒரு கதையும் உள்ளது. அருகில் உள்ள  சுகாசனப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கும் நாச்சியாருக்கு திருமணம் நடந்ததாக இன்னொரு கதையும் இங்கு வழங்குவதால் இத்தலம் திருமணத்தலமாக போற்றப்படுகிறது.  

  திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனை வணங்கி திருமண பாக்கியம் பெறலாம். அருகில் உள்ள மகிழ்ந்தவல்லி நாச்சியாரை மணந்த பெருமாளையும் சென்று தரிசிக்கலாம்.

ஜாதகத்தில் இரண்டு நாலு ஏழு எட்டில் ராகு கேது இருப்பவர்கள், செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், வேறு பாவ கிரக சேர்க்கையால் திருமணம் நடந்தும் திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்கள், மறு திருமணம் செய்வதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் ஆகியோர் இக்கோவிலுக்குத் தொடர்ந்து திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வந்து சிவபெருமானையும் அன்னை அசனாம்பிகையையும் தொடர்ந்து வணங்கி வர விரைவில் திருமணம் சிறப்பாக நடக்கும்.  மண வாழ்க்கைமகிழ்ச்சியோடு திகழும். நல்ல பிள்ளைகளும் பிறக்கும்.

கதை நான்கு

பிரம்ம தேவன் அன்ன பட்சி வடிவம் கொண்டு சிவபெருமானின் முடி தேடிச் சென்ற போது சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளாகி தமிழகத்தில் எங்குமே கோவில் கூடாது என்ற நிலைக்கு ஆளானார். பிரம்மனின் அகந்தையை அழித்த சிவபெருமானின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்று பிரம்மன் திருமாலிடம் சென்று அறிவுரை கேட்டார்.

திருமால் திட்டக்குடிக்குச் சென்று சிவபெருமானை நோக்கி தவம் இருந்தால் சிவனருளைப் பெறலாம் என்றார்.     பிரம்மதேவன் திட்டைக்குடிக்கு வந்து சிவனருளைப் பெற்றுத் தன் மகன் வசிட்டரையும் அழைத்துக் கொண்டு வந்து சிவபெருமானிடம் வசிட்டருக்கு ஞானோபதேசம் செய்யும்படி வேண்டினார். இறைவனும் வசிட்ட முனிவருக்கு நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதினார்.  

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்: தொன்மைச் சிறப்பும் ஆன்மிகப் பெருமையும்!

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்: தொன்மைச் சிறப்பும் ஆன்மிகப் பெருமையும்!

கல்வெட்டுக்கள்

திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் பல்லவர் காலத்தில் உருவாகி சோழர்கள் காலத்தில் சிவன் கோவிலாக மாற்றம் பெற்றதை உணர்த்தும் வகையில் பெற்றுள்ளது சோழர்களின் 28 கல்வெட்டுகள் இதுவரை இங்கு உள்ளன கி.பி. 1160 இல் இரண்டாம் ராஜராஜன் கி. பி. 1168 இல் இரண்டாம் ராஜாதிராஜன் கி. பி. 1181 இல் மூன்றாம் குலோத்துங்கன் கி. பி. 1242 இல் மூன்றாம் ராஜாதி ராஜன் கி.பி. 1271 இல் மதுரையை மீட்ட இரண்டாம் சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு அடுத்ததாக விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும் நாயக்க மன்னர்களும் இக்கோவிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர்  

விழாக்கள்

திட்டக்குடி வைத்தியநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதமும் பங்குனி மாதமும் பத்து நாள் திருவிழாக்கள் வெகு கோலாகலமாக நடக்கும். பங்குனி மாதத்தின் பௌர்ணமி அன்று தேர்த் திருவிழா சிறப்பாக நடக்கும்.

மாதந்தோறும் சிவராத்திரி வழிபாடும் மார்கழி மாத சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். சோமவார வழிபாடுகள் திங்கட்கிழமைகளில் சிறப்பாக நடக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறும்.  

 பௌத்தத் தடயங்கள்

திட்டைக்குடி சிவன் கோவிலில் எம(ன் வழிபட்ட) லிங்கம், நாகதேவன் லிங்கம், பிரம்ம தேவன் சாபம் நீங்க பெற்ற கதை, வசிட்டருக்கு ஞானோபதேசம் அருளிய கதை, (ஞான சரஸ்வதி ஆலயம்) தான்தோன்றி ஈஸ்வரர் சுயம்புலிங்கம், இந்திரன் சாபம் தீர்த்த கதை, பெரிய உருவில் அமைந்த அசனாம்பிகை போன்றவை கோவில் உருவாவதற்கு முன்பு இங்கு பௌத்த மடாலயமும் கோவில்களும் இருந்ததை உறுதி செய்கின்றன.

லிங்க உருவில் அமைந்த இந்திரன், நாகர், மருத்துவப் பெண் புத்தர் ஆகிய தெய்வங்கள் இன்று சுயம்புலிங்கம், நாகர்கள், வேங்கைவன நாயகி என்ற பெயர்களில் வழிபடப்படடுகின்றன. கால தேவன் வழிபாடு காலச்சக்கர வழிபாடு பௌத்த சமயத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

பௌத்த சமயம் பரவிய சீன ஜப்பான் கொரிய நாடுகளிலும் எமன் வழிபாடு காணப்படுகின்றது எமனை என்ம தென் என்று ஜப்பானில் இன்றும் அழைக்கின்றனர்.

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்

திருமணத்தில் தாமதமா? விழுப்புரத்தில் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வாருங்கள்

கதை உருவாக்கம்

பௌத்த கோவில்கள் சிவன் கோவில்களாக மாற்றம் பெறும்போது பௌத்தர்கள் வழிபட்ட இந்திரன் தவறு செய்தவனாகவும் சிவபெருமானால் சாபம் தீர்க்கப்பட்டவனாகவும் புதிய கதை உருவானது. பிரம்மதேவனும் பௌத்தர்களின் தெய்வம் ஆகும்.

சைவ சமய பிரச்சாரக் கதைகளில் பிரம்மன் பொய்யனாகவும் சிவனால் சாபம் பெற்றவனாகவும் அவனுக்கு தமிழகத்தில் எங்குமே கோவில் என்ற சாபம்.பெற்றவனாகவும் சித்திரிக்கப்படுகிறான். இங்கு. பிரம்மன் வழிபடு தெய்வத் தகுதியை இழந்தவனாகின்றான்.

சரஸ்வதி தேவி வழிபாடு

பௌத்தர்களின் வழிபாடுகளில் ஒன்றாகும். சரஸ் என்றால் அசைகின்ற அதாவது நீர் ஜலம் என்று பொருள். (அசையாததை அசலம் - மலை என்பர். ஹிமாச்சலம், அருணாச்சலம் மருதாச்சலம் கடிகாச்சலம் போன்றவை அசையாத மலைகளைக் குறிக்கும்).

சரசுவதி பௌத்த சமயம் பரவியிருந்த கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசைகின்ற நதிகளின் தாய் என்று அவளைக் காவல் தெய்வமாகப் பௌத்தர்கள் வணங்கினர். இன்றைக்கும் சரஸ்வதியை நீர் நிலையின் தெய்வமாகவும் வெற்றி, வீரம், காதல் ஆகியவற்றைப் பெற்றுத்தரும் வீரக் கடவுளாகவும் ஜப்பானில் வணங்குகின்றனர்.  

நாகர் வழிபாடு

தமிழகத்தின் தொன்மையான நாகர் வழிபாட்டை பௌத்த சமயம் தன்னுடைய வழிபாடாக ஏற்றுக் கொண்டு கொண்டது (religious compromise or synchronisation) நாகங்களைப் பொக்கிஷ காவலராகவும் பௌத்த கோவில்களின் காவல் தெய்வங்களாகவும் ஏற்றுக் கொண்டன.

கிபி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஆதி சங்கரர் இந்தியாவில் உள்ள வழிபாடுகளை ஆறாக வகைப்படுத்திய போது சைவம் வைணவம் காணாபத்தியம் கௌமாரம் சாக்தம் ஆகிய ஐந்து வழிபாடுகளும் நாக வழிபாட்டை தன்னுள் ஏற்றுக்கொண்டன. கோவில்களில் சிவலிங்கத்திற்கு நாக மகுடம் சூட்டுவதுண்டு. பெருமாளுக்கு படுக்கை நாகம் ஆகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.




+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US