துளசி செடியில் இந்த சுவாமியின் சிலையை மட்டும் வைக்காதீர்கள்

By Sakthi Raj Jun 14, 2025 03:58 AM GMT
Report

நம்முடைய இந்து மதத்தில் துளசி செடி மஹாலக்ஷ்மியின் அம்சமாக போற்றி வழிபாடு செய்யப்படுகிறது. மேலும், நம்முடைய வீடுகளில் துளசி செடியை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்யும் பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும்.

அந்த வகையில் துளசி செடியில் விநாயகரின் சிலையை வைக்கலாமா? என்று பலருக்கும் தெரியாது. அதை பற்றிப் பார்ப்போம். புராணக்காலங்களில் துளசி தேவி விநாயகருக்கு சாபம் கொடுத்ததாக சொல்கிறார்கள்.

துளசி செடியில் இந்த சுவாமியின் சிலையை மட்டும் வைக்காதீர்கள் | Thulasi Plant Worship And Parigarangal In Tamil

அதாவது அவரின் காதலை மதிக்காத விநாயகருக்கு வருங்காலங்களில் அவரின் எண்ணங்களுக்கு எதிராகவே அவருடைய திருமணம் நடக்கும் என்று சாபம் கொடுத்திருக்கிறாள் துளசி. இதன் காரணமாகத்தான் விநாயகர் வழிபாட்டில் துளசி வைப்பதில்லை.

ஜோதிடம்: வெள்ளியில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்கள் கவனத்திற்கு?

ஜோதிடம்: வெள்ளியில் மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்கள் கவனத்திற்கு?

அதோடு விநாயகருக்கு துளசி வைத்து வழிபாடு செய்யும் பொழுது நமக்கு அவ்வளவு சிறந்த பலன் கிடைப்பது இல்லை. நாம் துளசி செடி அருகே லட்சுமி சிலையை வைத்தால் அதன் அருகே கட்டாயம் விநாயகர் சிலையை வழிபாட்டிற்கு வைக்கக்கூடாது.

மேலும், துளசி செடியை வீடுகளில் பால்கனியில் அல்லது முற்றத்தில் வைக்கக்கூடாது. அதோடு நாம் விநாயகர் சிலையை எப்பொழுதும் உயரமான இடங்களில் மட்டுமே வைத்து வழிபாடு செய்யவேண்டும். முக்கியமாக விநாயகர் சிலைக்கு முன் எந்த ஒரு செடிகளையும் வைக்க கூடாது. அவை எதிர்மறை சக்திகளை ஈர்ப்பதாக சொல்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US