நாளைய ராசி பலன் (25-01-2026)
மேஷம்:
இன்று உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல் உண்டாகும். வருமானம் உயர்த்துவதை பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்களுடன் மிக சிறந்த நேரத்தை செலவு செய்வீர்கள். நன்மையான நாள்.
ரிஷபம்:
உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு உடல் சோர்வு உண்டாகும். பிறரிடம் தேவை இல்லாத விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
உங்கள் வீடுகளில் எதிர்பாராத பிரச்சனை சந்திப்பீர்கள். விடுமுறை நாட்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவு செய்வீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
கடகம்:
குடும்பத்துடன் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். ஒரு சிலருக்கு உறவினர்களின் துணையால் முக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் வரும். நிதானமாக இருக்க வேண்டும்.
சிம்மம்:
பொழுது போக்கு விஷயங்களில் பங்கு கொள்ளும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாத செலவுகளை தவிர்த்து விடுங்கள். குடும்பத்துடன் மன கசப்புகள் வரலாம். மதியம் மேல் சரி ஆகும்.
கன்னி:
வீடுகளில் தேவை இல்லாத குழப்பங்கள் உண்டாகும். எதையும் தீர ஆலோசனை செய்து பிறகு நல்ல முடிவிற்கு வருவது நல்லது. வருமானம் உயர்த்துவதை பற்றி சிந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
துலாம்:
இன்று வாழ்க்கை தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். குடும்பத்தினர் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். எதிர்பாராத நட்புகள் அறிமுகம் நல்ல மாற்றம் கொடுக்கும் நாள்.
விருச்சிகம்:
அரசு வழியில் சில முக்கியமான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவை இல்லாமல் உங்கள் சொந்த வாழ்க்கை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்பத்தினர் ஆறுதல் கிடைக்கும்.
தனுசு:
வீட்டில் உள்ள குடும்ப பிரச்சனை நல்ல முடிவை பெரும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். பிள்ளைகள் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மகரம்:
வாக்கு வாதத்தில் ஈடுபடாதீர்கள். திருமணம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு மன கசப்பை கொடுக்கும். குலா தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு இனிமை கொடுக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கும்பம்:
தேவை இல்லாமல் வீண் வாக்குறுதிகள் யாருக்கும் கொடுக்காதீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும்.
மீனம்:
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல் நீங்கள் சில செயல்களை செய்வீர்கள். தொலை தூர பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பிரிந்து சென்ற உறவுகள் உங்களிடம் மீண்டும் வந்து பேசுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |