நாளைய ராசிபலன் (30-05-2026)
மேஷம்:
இவர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் வருமான உயர்வும் கிடைக்கும். ஒரு சிலருக்கு நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமான காரியங்களை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.
ரிஷபம்:
வாழ்க்கை துணையுடன் எப்படி அனுசரித்து செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு தந்தை வழியின் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
மிதுனம்:
வேலைப்பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேச வேண்டும். மூன்றாம் நபரிடம் தேவை இல்லாமல் உங்களுடைய சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
கடகம்:
இன்று நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். ஒரு சிலருக்கு உடல் சோர்வு மன சோர்வு உண்டாகலாம். கணவன் வழியே ஏற்பட்ட மன கசப்புகள் விலகும்.
சிம்மம்:
இன்று தொழில் ரீதியாக உங்களுக்கு முக்கியமான நாள். உங்களுக்கு தொந்தரவு செய்தவர்கள் விலகிச் செல்வார்கள். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிடித்த விஷயங்களை செய்வீர்கள்.
கன்னி:
வியாபாரம் தொடர்பாக நீங்கள் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். ஒரு சிலருக்கு கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வண்டி வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும்.
துலாம்:
நீங்கள் உங்களை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய நாள். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். வேலை பளு அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும்
விருச்சிகம்:
நீங்கள் கடந்த கால தவறுகளை எண்ணி மனம் வருந்துவீர்கள். பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவது நன்மை தரும். தாயின் முழு ஆதரவும் தந்தையின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு;
மனதில் உள்ள ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களில் கவனமாக இருங்கள். கால் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.
மகரம்:
தந்தை வழி சொத்துக்களால் இருந்து வந்த பிரச்சனை விலகும். தாயிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள். இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சில சிக்கல் வரலாம்.
கும்பம்:
இன்று திடீரென்று வேலைக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகளின் படிப்புகளில் இருந்து வந்த சிக்கல் விலகும். கல்வியில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
மீனம்:
இன்று நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தது போல் கைக்குடி வரும். சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய அமைப்பு உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |