பெண்களின் மாங்கல்ய பலன் கூட இன்று சந்திர தரிசனம் செய்யுங்கள்
இன்று ஆவணி சந்திர தரிசனம் வருகிறது.அப்பொழுது சந்திரனை கண்டால் தீராத நோய்கள் தீரும்.வளர்பிறை சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறுகள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும் ஏனெனில் சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
நாளைய தினம் வீட்டில் மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காம தரிசனம் செய்வோம்.இப்பொழுது சந்திர தரிசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகளும் பலன்களையும் பற்றி பார்ப்போம்.
அதாவது ஒருவர் சந்திர தரிசனம் செய்ய அவர் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கிறது. பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். கோவிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம்.
வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே இந்த வளர்பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல.
சாட்சாத் பரமேஸ்வரனின் திருமுடியை நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். மேலும் ஒருவர் சந்திர தரிசனம் செய்வதால் அவர்களுடைய பாவங்கள் விலகுகிறது.
பெண்கள் சந்திர தரிசனம் செய்வதால் மாங்கல்ய பாக்கியம் கூடுகிறது,குடும்பமாக சந்திரச தரிசனம் செய்யும் பொழுது அவர்கள் ஆயுள் கூடுகிறது.மேலும் நம்முடைய பார்வை கோளாறு நீங்குகிறது.ஆக நாளை மறக்காமல் சந்திர தரிசனம் செய்து இறைவனின் பரிபூர்ண அருளை பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |