ராசி பலன்(14-06-2025)
மேஷம்:
நாளை உங்களின் திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்கு உடல் சோர்வு உண்டாகும். நண்பர்களுடன் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
ரிஷபம்:
நாளை ரிஷப ராசிகாரர்களுக்கு திருமண வாழ்க்கையில் ஒருவித அச்சம் உண்டாகும். எந்த ஒரு ஒப்பந்தமும் நாளை செய்யாமல் இருப்பது நன்மை தரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிகாரர்களுக்கு நாளை மனதில் நீண்ட நாட்களாக இருந்த ஆசைகள் நிறைவேறும். ஒரு சிலருக்கு குடும்பத்தில் எதிர்பாராத சண்டைகள் உருவாகும். தந்தை வழி உறவால் ஆதாயம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிகாரர்களுக்கு நாளை வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முடிந்த வரை நாளை கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். அரசு வேலை செய்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு நாளை மிக முக்கியமான வாய்ப்புகள் தேடி வர உள்ளது. மனதில் உற்சாகமும் நம்பிக்கையும் பிறக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு நாளை எதிர்பாராத பயணம் மேற்கொள்ள நேரிடலாம். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். மன அழுத்தம் உண்டாகும். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
துலாம்:
துலாம் ராசிக்கு நாளை நினைத்த காரியம் நடப்பதில் தடைகள் உண்டாகலாம். சிலருக்கு எதிர்பாராத நற்செய்தி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தாய் வழி உறவால் சந்தித்த சிக்கல்கள் விலகி செல்லும்.
விருச்சிகம்:
வேலை அதிகமாக இருக்கும். அதை சரியான நேரத்தில் முடிக்க உங்கள் நாளை திட்டமிடுவீர்கள். பணம் செலவழிக்கும்போது கவனமாக இருங்கள், இல்லையென்றால் கடன் வாங்க வேண்டிய நிலை வரலாம்.
தனுசு:
உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தில் நற்செய்தி தேடி வரும். மனதிற்கு பிடித்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்:
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஒரு சில சிக்கல் உண்டாகலாம். இறைவழிபாடு மன அமைதியை கொடுக்கும். கடன் வாங்கியவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தொலைதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
உங்கள் தனித்துவமான படைப்புகளால் சமூகத்தில் மரியாதை கிடைக்கும். இடம் மாற நினைக்கிறீர்கள் என்றால், இது சரியான நேரம். வருமானம் சிறப்பாக அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமான நாளாக இருந்தாலும் மன உறுதியுடன் சமாளிப்பீர்கள். குடும்ப விஷயத்தை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சமுதாயத்தில் உங்கள் மரியாதை உயரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |