செவ்வாய்க்கிழமை இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகுமாம்

By Sakthi Raj Jun 24, 2025 07:00 AM GMT
Report

 நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு. அப்படியாக, செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் மற்றும் ஹனுமன் வழிபாட்டிற்கும் உரிய மிக சிறந்த நாளாகும்.

மேலும், ஜாதகத்தில் செவ்வாயின் பாதிப்புகள் அதிக அளவில் கொண்டு இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலகும் என்பது ஐதீகம்.

தன் பிள்ளைகளின் குறை தீர்க்கும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

தன் பிள்ளைகளின் குறை தீர்க்கும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

அதாவது, ஒருவருக்கு செவ்வாயின் பாதிப்புகள் இருந்தால் அந்த ஜாதகருக்கு பூமி தொடர்பான பிரச்சனைகள், திருமணத்தில் பாதிப்புகள், ரத்தம் தொடர்பான நோய்கள், வழக்கு போன்ற தொந்தரவுகளை சந்திக்கக்கூடும்.

அவ்வாறு பிரச்சனைகளை சந்திப்பவர்கள் செவ்வாய்கிழமை அன்று இந்த 5 பொருட்களை தானம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றல் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும். அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.

செவ்வாய்க்கிழமை இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகுமாம் | Tuesday Murugan Hanuman Worship In Tamil

1. செவ்வாய்க்கிழமை அன்று சிவப்பு நிற பொருட்களை அல்லது சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம். அவ்வாறு செய்வதால் அவர்களுக்கு வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் பெருகுவதோடு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் உண்டாகும்.

2. செவ்வாய்கிழமை ஹனுமன் வழிபாட்டிற்கும் உகந்த நாள் என்பதால் அன்று கடலை மாவு லட்டு தானம் செய்யலாம். ஹனுமனுக்கு கடலை மாவு லட்டு என்றால் மிகவும் பிடித்தமான பொருள் ஆகும். அதனால் அதை நாம் செவ்வாய்கிழமையில் தானம் செய்வது மிக சிறந்த பலன் கொடுக்கும்.

3. மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் மசூர் பருப்பு தானம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட மாங்கல்ய தோஷம் விலகும். திருமணத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.

செவ்வாய்க்கிழமை இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகுமாம் | Tuesday Murugan Hanuman Worship In Tamil

4. குடும்பத்தில் யாரேனும் உடல் ஆரோக்கிய குறைபாடுகளை சந்தித்து வந்தால் அவர்கள் செவ்வாய்கிழமையில் தேங்காய் தானம் செய்யலாம். தேங்காய் தானம் செய்யும் பொழுது அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் விலகி நல்ல மாற்றம் உண்டாக்கும்.

5. திடீர் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுபவர்கள் செவ்வாய்கிழமை அன்று கஞ்சி அல்லது அரிசி தானம் செய்தால் சிறந்த மாற்றத்தை காணலாம். இவ்வாறு செய்வது நம்முடைய வறுமையை நீங்கி கடன் சுமையை குறைக்கும்.

மேற்கண்ட பொருட்களை எல்லாம் செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் தானம் செய்வது மிக சிறந்த பலன் அளிக்கும். இதை கடமைக்காக செய்யாமல், முழுமனதோடு நம்பிக்கையோடு தானம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் சிறந்த மாற்றத்தை காணலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US