உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்-கடகம்

By Sakthi Raj Jun 24, 2024 09:30 AM GMT
Report

நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி, சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

புனர்பூசம்

மன்னும் மலைமகள் கையால்

வருடின மாமறைகள்

சொன்ன துறைதொறும் தூப்பொருள்

ஆயின தூக்கமலத்து

அன்னவடிவின அன்புடைத்

தொண்டர்க்கு அமுது அருத்தி

இன்னல் களைவன இன்னம்பரான்

தன் இணை அடியே.

பூசம்

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய

மூர்த்திப் புலி அதளன்

உருவுடை அம்மலைமங்கை

மணாளன் உலகுக்கு எல்லாம்

திருவுடை அந்தணர் வாழ்கின்ற

தில்லை சிற்றம்பலவன்

திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம்

கருநட்ட கண்டனை அண்டத்

தலைவனைக் கற்பகத்தைச்

செருநட்ட மும்மதில் எய்ய

வல்லானைச் செந்நீ முழங்கத்

திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு

இறையைச் சிற்றம்பலத்துப்

பெருநட்டம் ஆடியை வானவர்

கோன் என்று வாழ்த்துவனே.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US