பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா

Pazhani Aandavar Temple
By Yashini May 03, 2024 08:00 PM GMT
Yashini

Yashini

Report

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா அறுபடை வீடுகளில் நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 16 ஆம் தேதி தொடங்குகிறது.

அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா | Vaikasi Visakam Festival In Palani Temple

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேதராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்க குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி மயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். 

பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா | Vaikasi Visakam Festival In Palani Temple

மறுநாள் 22 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, வீனை இன்னிசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.        

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US