கடன் பிரச்சனையில் இருந்து விடுபட வாராஹி தீப வழிபாடு

Parigarangal Bakthi Varahi Amman
By Sakthi Raj May 08, 2024 06:30 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

உக்கிர தெய்வங்களுக்கு அமாவாசை தினம் என்பது மிகவும் சிறப்புக்குரிய தினமாக திகழ்கிறது. அமாவாசை தினத்தில் உக்கிர தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது அதன் பலன் நமக்கு பல மடங்கு அதிகமாக கிடைக்கும்.

நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். அந்த முறையில் வாராகி அம்மனுக்கு நம்முடைய வீட்டிலேயே எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கும் என்று பார்ப்போம்.

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட வாராஹி தீப வழிபாடு | Varahiamman Vazhipadu Kadan Parchanai Agalvilakku 

வாராகி அம்மனின் அருளால் பலரும் பல பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கடன் பிரச்சினை தீர, சண்டை சச்சரவுகள் நீங்க, எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்க, குடும்ப ஒற்றுமை ஏற்பட, மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்க, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓட என்று பல காரணங்களுக்காக நாம் வராகி அம்மனை வழிபடுவோம்.

இந்த பிரச்சினைகள் அனைத்தையும் ஒரு சேர தீர்ப்பதற்கு 18 நாட்கள் மட்டும் நாம் வாராகி அம்மனை நினைத்து வழிப்படும் முறையைப் பற்றி பார்ப்போம்.

இந்த வழிபாட்டை இன்று இரவு 10 மணிக்கு மேல் செய்ய வேண்டும். இதற்கு ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி பச்சரிசியை போட்டு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கருப்பு எள்ளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட வாராஹி தீப வழிபாடு | Varahiamman Vazhipadu Kadan Parchanai Agalvilakku

பிறகு அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு கொள்ளுங்கள். அடுத்ததாக வெள்ளை அல்லது சிவப்பு நிற துணியை எடுத்து அதில் ஏழு மிளகை போட்டு மூட்டையாக கட்டி அந்த அகல் விளக்கில் வைத்து விடுங்கள்.

நெய்வேத்தியமாக பானகத்தை கலந்து வைத்துவிட்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். முழு மனதோடு வாராகி அம்மனை நினைத்து உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை கூறி குறைந்தது 19 நிமிடமாவது வழிபாடு செய்ய வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு தட்டில் வைத்திருந்த பச்சரிசி, கருப்பு எள்ளை பறவைகளுக்கு உணவாக வைத்து விட வேண்டும். இந்த மிளகு மூட்டையில் கற்பூரத்தை வைத்து வீட்டிற்கு வெளியே வைத்து எரித்து விட வேண்டும்.

பானகத்தை அருகில் இருக்கும் வேப்பமரத்திற்கு ஊற்றி விட வேண்டும், தொடர்ந்து 18 நாட்கள் இதே முறையில் நாம் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது.

கொல்லிமலையில் சக்தி வாய்ந்த எட்டுக்கை அம்மன் கோயில்

கொல்லிமலையில் சக்தி வாய்ந்த எட்டுக்கை அம்மன் கோயில்

 

எந்தவித அசுப காரியங்களுக்கும் செல்லக்கூடாது. தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது. 18 நாட்கள் நிறைவடையும் பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையும் மிகவும் சுலபமாக தீர்வதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: அமாவாசை எலுமிச்சை பரிகாரம் மிகவும் சக்தி வாய்ந்த வாராகி அம்மனை அமாவாசை தினத்தில் இருந்து இந்த முறையில் வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது என்ற முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலன் அடைவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US