கண் திருஷ்டியை போக்க வீரகணபதியை இப்படி வழிபடுங்கள்
கண் திருஷ்டி என்பது மிகவும் பொல்லாதது. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள்.
ஒருவர் இயல்பாக பார்ப்பதற்கும் பொறாமை எண்ணத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
எவர் ஒருவர், தம்மை பார்த்து தீய எண்ணத்துடனும் பொறுமையுடனும் கண் இமைக்காமல் பார்க்கிறாரோ அப்போது நமக்கு கண் திருஷ்டி ஏற்படும்.
அந்தவகையில், கண் திருஷ்டியை போக்க வீரகணபதியை வழிபடுவது எப்படி என்று பார்க்கலாம்.
எப்படி வழிபடுவது?
செவ்வாய்க்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் மாலை 6 மணியில் இருந்து 10 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு வீட்டில் இருக்கும் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
இந்த வழிபாட்டை செய்யும் பொழுது வீரகணபதிக்கு பானகம், செவ்வாழை, மாதுளம் பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் அனைவரும் வீட்டிற்குள் வந்த பிறகு பூஜையறை, வரவேற்பறை மற்றும் வீரகணபதி இருக்கும் இடத்தில் தீபம் ஏற்றி வைக்கவும்.
வீட்டிற்குள் இருக்கக்கூடிய அனைத்து விதமான மின்விளக்குகளையும் அணைத்து விட்டு பின்சாம்பிராணியை வீடு முழுவதும் காட்ட வேண்டும்.
அடுத்ததாக விநாயகப் பெருமானுக்கு சிவப்பு மலர்களால் ஓம் வீரகணபதியே நமஹ என்று 11 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு முழுமனதோடு எங்களிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலக வேண்டும், எந்தவித தீய சக்திகளாலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக பூ சூடத்தை மொத்தம் 8 துண்டுகளை ஒன்றாக சேர்த்து வைத்து வீட்டின் இருக்கும் ஒவ்வொருவரின் தலையையும் தனித்தனியாக சுற்ற வேண்டும்.
பிறகு வீட்டை முழுவதுமாக சுற்றிவிட்டு வாசலில் வைத்து எரித்துவிட்டு வீட்டிற்குள் வரவேண்டும்.
இவ்வாறு செய்யும்பொழுது வாழ்க்கையில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகளும், ஏவல், பில்லி, சூனியம் முற்றிலும் நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |