தடைகளை அகற்றும் விரலி மஞ்சள் வழிபாடு- 21 வாரத்தில் நினைத்து கைகூடி வரும்

By Sakthi Raj Jun 18, 2025 07:03 AM GMT
Report

மனிதன் வாழ்க்கையில் சந்திக்கும் தடைகள் யாவும் அவனின் கர்மவினைகளை கழித்து அவனுக்கு பக்குவத்தையும், ஞானத்தையும் வழங்கவே என்றாலும், தடைகளை சந்திக்கும் நபருக்கு தான் தெரியும் வாழ்கையின் வலி.

அப்படியாக, நடப்பவை எல்லாம் ஏதேனும் காரணத்திற்காகவே என்று எடுத்துக்கொண்டு, யாரையும் குறை சொல்லாமல், பலி போடாமல் நமக்கு வரும் தடைகளை எவ்வாறு தகர்த்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று தான் நகர வேண்டும்.

அந்த வகையில் இறைவழிபாட்டிற்கு மிஞ்சிய சக்தி இந்த உலகில் இல்லை. அதிலும் தடைகளை எல்லாம் அடியோடு அழிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் விநாயகப்பெருமான். அவ்வாறு சந்திக்கும் சோதனைகளை கடக்க நாம் செய்யவேண்டிய விநாயகர் வழிபாட்டை பற்றி பார்ப்போம்.

தடைகளை அகற்றும் விரலி மஞ்சள் வழிபாடு- 21 வாரத்தில் நினைத்து கைகூடி வரும் | Vinayagar Valipadum Parigarangalum In Tamil

பொதுவாகவே, எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் நாம் விநாயகரை வாழிபாடு செய்யாமல் செய்வது இல்லை. காரணம் தடையின்றி அந்த காரியம் நடக்க விநாயகரின் அருள் கட்டாயமாக நமக்கு தேவை. மேலும், இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான ஒரு பொருள் மஞ்சள்.

பிறப்பிலிருந்தே அதிக IQ கொண்ட 3 ராசிகள் யார் தெரியுமா?

பிறப்பிலிருந்தே அதிக IQ கொண்ட 3 ராசிகள் யார் தெரியுமா?

நம்முடைய இந்தியப் பாரம்பரியத்தில் மங்கலப் பொருளாகவும், சுபத் தன்மையின் அடையாளமாகவும் இந்த மஞ்சள் கருதப்படுகிறது. அப்படியாக, வாழ்க்கையில் தடைகளை சந்திப்பவர்கள், அதிலும் குறிப்பாக திருமண தடையை சந்திப்பவர்கள் அவர்களின் வயது என்னவோ, அவர்களின் வயதிற்கு ஏற்ற எண்ணிக்கையில் விரலி மஞ்சள்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, தேர்ந்தெடுத்த விரலி மஞ்சள்களைச் சுத்தமான மஞ்சள் நூல் அல்லது கயிறு கொண்டு மாலையாகக் கோர்க்க வேண்டும். அதோடு விநாயகரை வழிபாடு செய்ய உகந்த நாளாக புதன்கிழமை உள்ளது. நாம் புதன் கிழமையில் இந்த வழிபாட்டை செய்யவேண்டும்.

தடைகளை அகற்றும் விரலி மஞ்சள் வழிபாடு- 21 வாரத்தில் நினைத்து கைகூடி வரும் | Vinayagar Valipadum Parigarangalum In Tamil

இந்த வழிபாட்டை அருகில் இருக்கும் விநாயகர் ஆலயம் அல்லது வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து, கோர்த்த விரலி மஞ்சள் மாலையை விநாயகப் பெருமானுக்குச் சாற்றி நம் வேண்டுதல் வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 11 வாரங்கள் செய்யலாம், முடிந்தவர்கள் 21 வாரங்கள் செய்யலாம்.

இவ்வாறு செய்வதின் மூலம் மஞ்சளின் மங்கலத் தன்மையும், விநாயகரின் தடைகளை நீக்கும் சக்தியும் இணைந்து நம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து தடைகளும் விலகி விரைவில் திருமண வரன் தேடி வரும்.

இதை ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், குழந்தை பிறப்பில் தாமதத்தை சந்திப்பவர்கள், அல்லது சரியான தொழில் அமையாதவர்கள் என்று தடைகளை சந்திக்கும் எல்லோரும் செய்யலாம். இதை முழு மனதார வழிபாடு செய்ய நிச்சயம் விநாயகரின் அருளால் நல்ல மாற்றத்தை சந்திப்பீர்கள்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US