மிதுன ராசிக்கு செல்லும் சூரியன்... எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
மிதுன ராசிக்கு செல்லும் சூரியனால் சில சிக்கல்களை சந்திக்கும் ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் மாற்றம்
ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சி என்பது சில தருணங்களில் பாதிப்பையும், சில தருணங்களில் அதிர்ஷ்டத்தையும் அளிக்கின்றது.
பொதுவாக ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றது.
மேலும் வேறொரு கிரகங்களுடன் ஒன்றினையும் நிகழ்வினால், சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றது.
தற்போது கிரகங்களின் அதிபதியாகிய சூரியன் மிதுன ராசிக்கு நகர்கின்றார். கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் மிதுன ராசியை ஆட்சி செய்வதால், அறிவு, பல்துறை திறன், தொடர்பு இவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.
இந்த கிரக பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை அளித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு கடுமையான சோதனைகளையும், சவால்களையும் ஏற்படுத்துமாம்.
அவ்வாறு சவால்களை சந்திக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கடகம்
கடக ராசியினர் இந்த கிரக பெயர்ச்சியின் போது பல சிரமங்களையும், நிதி இழப்புகளையும், கடுமையான மன சிக்கல்களையும் ஏற்படுத்தும். இத்தருணத்தில் எதிலும் முதலீடு செய்வதை தவிர்க்கவும். முக்கியமான முடிவுகளை கவனமாக எடுக்கவும்.
பெரிய நிதி நன்மைகள் இல்லாவிட்டாலும், பயணம், உயர்கல்வி மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு வாய்ப்புகள் உள்ளன.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்க, குடும்பத்தின் பெரியவர்களிடம் அறிவுரை கேட்பது நல்லது. எச்சரிக்கையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டிய நேரமாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இந்த பெயர்ச்சியின் போது எதிர்பாராத நிகழ்வுகளை சந்திக்க போகின்றனர். முடிவு எடுப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
வேலையில் சாதகமான சூழல் நிலவினாலும் சில புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. உறவுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பது அவசியம்.
இத்தருணத்தில் விழிப்புணர்வுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மகரம்
மக ராசியினருக்கு இத்தருணத்தில் எடுக்கும் முடிவுகள் நஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஆகவே எச்சரிக்கையாகவும், பணிவாகவும் செயல்படவும். ஆக்ரோஷமான மற்றும் அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். புத்திசாலித்தனமாக இருப்பதுடன், பெரியவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்வது உதவியாக இருக்கும்.
சில குறுகிய கால சிரமங்கள் இருந்தாலும், நீண்டகால நிதி ஆதாயங்களை அடைவதற்கு பொறுமை அவசியம். மன அமைதியை அடைய ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள்.
இந்த காலகட்டத்தில் உறுதியாகவும், எச்சரிக்கையாகவும் இருந்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |