இன்று(18-06-2025) புதாஷ்டமி- திருமணம் கைகூட செய்யவேண்டிய வழிபாடு

By Sakthi Raj Jun 18, 2025 04:15 AM GMT
Report

ஒரு மாதத்தில் வரும் அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு பிறகு எட்டாவது திதியை அஷ்டமி திதி என்பார்கள். இந்த அஷ்டமி திதியானது புதன் கிழமையில் அமையப்பெற்றதால் இந்த தினத்தை புதாஷ்டமி என்பார்கள். இந்த தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாம் எண்ணற்ற பலன்களை பெறலாம் என்கிறார்கள்.

அப்படியாக, இன்று(18-06-2025) புதாஷ்டமியில் நாம் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம். பொதுவாக அஷ்டமி தினத்தில் காளி, துர்கை, பைரவர், சப்தகன்னியர் போன்ற தெய்வங்களுக்கு உரிய வழிபாட்டு தினம் ஆகும்.

அதிலும், துன்பங்கள் விலக அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்வது மிக சிறந்த நன்மையை கொடுக்கும். அப்படியாக, இன்று புதாஷ்டமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் துரத்தும் துன்பங்கள் விலகி நிம்மதி உண்டாகும்.

இன்று(18-06-2025) புதாஷ்டமி- திருமணம் கைகூட செய்யவேண்டிய வழிபாடு | Puthashtami Valipadum

அந்த வகையில் இந்த புதாஷ்டமியில் அஷ்டமாதர்களை வழிபடுவதற்குரிய சிறப்பான விரத தினமாக நமது பெரியோர்களால் சொல்லியிருக்கிறார்கள். அதை பற்றிப்பார்ப்போம். முன்னொரு காலத்தில் கவுசிகன் என்பவன் அவருடைய சகோதரி விஜயை ஆகியோர் கங்கைக்கரையில் வாழ்ந்து வந்தனர்.

உங்களின் பிறந்த மாதம் எது? இந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்

உங்களின் பிறந்த மாதம் எது? இந்த விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்

ஒரு நாள் மேய்ச்சலில் இருந்த அவர்களுடைய அரியவகை எருது ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் குடும்பமாக எல்லோரும் தேடி அலைந்தனர். அந்த வேளையில் பசியால் வாடிய கவுசிகன், கங்கைக்கரையில் புதாஷ்டமி விரதபூஜையில் ஈடுபட்டிருந்த பெண்களைப் பார்த்து பசி அதிகமாக உள்ளது.

சாப்பிட ஏதாவது உணவு இருந்தால் தாருங்கள் என்று கேட்டான். அதற்கு அந்த பெண்கள், எவர் ஒருவர் பூஜையில் மிகுந்த பக்தியோடும், கவனத்தோடும் ஈடுபாடு செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தர இயலும் என்று கூறினார்கள்.

இன்று(18-06-2025) புதாஷ்டமி- திருமணம் கைகூட செய்யவேண்டிய வழிபாடு | Puthashtami Valipadum

அதையடுத்து, கவுசிகனும், விஜயையும் அந்த பூஜையில் பங்குகொண்டு அவர்கள் அளித்த பிரசாதத்தினை உண்டனர். அவ்வாறு அவர்கள் அந்த பூஜையில் கலந்து கொண்டபலனாக அவர்கள் தேடி அலைந்த எருது கிடைத்தது.

அதோடு அவனது வாழ்வும் வளம்பெறத் தொடங்கியது. கவுசிகனின் தங்கை விஜயை விரதம் இருந்த பலனாக நல்ல கணவனை பெற்றாள். கவுசிகனும் அயோத்தியின் அரசன் ஆனான்.

அதனால், நாம் இந்த புதாஷ்டமியில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது தெய்வங்களின் அருளால் நாம் நினைத்த காரியம் கைகூடி வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US