நீங்கள் பூப்படைந்த கிழமை எது? உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
இந்த உலகத்தில் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஒவ்வொரு கிழமைகளும், ஒவ்வொரு கிரகங்களும், ஒவ்வொரு மனிதனுடைய குணாதிசயங்கள் உடன் தொடர்பு கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பெண்களுடைய முக்கிய நிகழ்வாக அவர்களுடைய பூப்படைதல் இருக்கிறது. அதில் எந்த கிழமைகளில் பெண்கள் பூப்படைந்தால் அவர்களுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவருக்கும் அந்த பெண்ணிற்கும் உள்ள பந்தம் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை:
இந்த கிழமையில் பூப்படைந்த பெண்கள் தங்களுடைய கணவனை அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவார்கள். கணவன் தனக்கு மட்டுமே சொந்தம் என்கின்ற அதிகாரம் கொள்வார்கள்.
திங்கட்கிழமை:
இவர்கள் கணவரிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். கணவனிடம் அந்த அன்பையும் இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
செவ்வாய் கிழமை:
இன்று கிழமைகளில் பூப்படைந்த பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாக வெளிப்படும். மேலும், கணவன்தான் மனைவியை அதிகமாக சோதிக்க கூடியவராக இருப்பார்.
புதன்கிழமை:
இவர்கள் கணவனுடைய சொல்லிற்கு மறுத்து பேசமாட்டார்கள். கணவனே உலகம் என்று வாழ்வார்கள்.

வியாழக்கிழமை:
கணவனுடைய சொல்லே மந்திரம் என்று வாழ்பவர். கணவரிடம் அதைத்தான் இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
வெள்ளிக்கிழமை:
கணவனுக்கு இவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கணவனை தாங்கி பிடிப்பவர்களாக இருப்பார்கள். கணவனை எப்பொழுதும் தோற்றுப் போக விட மாட்டார்கள். கணவனையே சுற்றி சுற்றி வருவார்கள்.
சனிக்கிழமை:
இவர்களிடம் பிடிவாதம் சற்று அதிகமாக இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். கணவன் தன்னுடைய பேச்சை எப்பொழுதும் கேட்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |