எந்த ராசிக்காரர்கள் யாருடைய பேச்சை கேட்கவே மாட்டார்கள் தெரியுமா?
நம்மில் எல்லோருக்கும் ஒரு குணம் இருக்கும். நமக்கு நெருங்கிய ஒருவர் மட்டும் நமக்கு ஆலோசனை சொன்னால் கேட்டுக் கொள்வோம். இன்னும் ஒரு சிலர் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள். அதற்கு அவர்களுடைய ராசியின் தன்மை காரணமாக இருக்கிறது. அப்படியாக, எந்த ராசிக்காரர்கள் யாருடைய பேச்சை கேட்கவே மாட்டார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்களுடைய பேச்சை மட்டும் தான் கேட்பார்கள். பிறரை கண்டு கொள்ள மாட்டார்கள்.
ரிஷபம்:
இவர்கள் யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள். ஆனால் இறுதியாக அவர்கள் முடிவை செயல்படுத்துவார்கள்.
சிம்மம்:
இவர்களிடம் நாம் எதுவுமே பேச முடியாது. பேசினாலும் அதை கண்டு கொள்ள மாட்டார்கள்.
தனுசு:
இவர்கள் நம்முடைய பேச்சை கேட்பது போல் இருக்கும். ஆனால் செயல் அதற்கு வேறு மாதிரியாக அமையும்.
விருச்சிகம்:
பேசும்பொழுது அமைதியாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் செய்வார்கள்.
மிதுனம்:
இவர்களிடம் சரியான விஷயங்களை எடுத்துச் சொன்னால் கட்டாயம் கேட்டு நடந்து கொள்வார்கள். கடகம்: யாரேனும் நல்லதை சொன்னால் நிச்சயம் காது கொடுத்து கேட்பார்கள்.
கன்னி:
ஆலோசனை சொல்பவர்களின் மனம் காயப்படக்கூடாது என்று நினைக்கக் கூடியவர்கள்.
மகரம்:
ஒருவர் பேச்சை கேட்பார்கள். ஆனால் அது அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே அதை செய்வார்கள்.
கும்பம்:
இவர்கள் ஒருவருடைய ஆலோசனையை கேட்பது பொறுமை மிகக் குறைவு என்பதால் கேட்க மாட்டார்கள்.
மீனம்:
சில சமயங்களில் கேட்பார்கள், சில சமயங்களில் கண்டு கொள்ள மாட்டார்கள். துலாம்: இவர்கள் யார் நல்ல அறிவுரை சொன்னாலும் கட்டாயம் கேட்டு நடந்து கொள்வார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |