2026: இன்று ஆடிப்பெருக்கு.. கட்டாயமாக செய்ய வேண்டிய விஷயங்கள்
தமிழ் மாதம் ஒவ்வொரு மாதமும் ஆன்மீகம் நிறைந்த மாதமாக இருந்தாலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் வருகின்ற வெள்ளி செவ்வாய்க்கிழமைகள் எந்த அளவிற்கு சிறப்பு பெற்றதோ அதே அளவிற்கு ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு என்ற கொண்டாட கூடிய தினமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தமிழ்நாடு முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தில் புண்ணிய தலங்களின் அருகே நதிக்கரையில் பக்தர்கள் அதிகாலைகளையே நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தர்ப்பணம்:
ஆடிப்பெருக்கு நன்னாளில் அதிகாலையில் புண்ணிய தலங்களில் அருகே இருக்கக்கூடிய நீர் நிலைகளில் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கமாக உள்ளது. அதிலும் காவிரி கரையோரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் இந்த நாளில் அதிக அளவில் பக்தர்கள் தர்ப்பணம் அளிப்பார்கள்.
தாலிக்கயிறு மாற்றுதல்:
ஆடிப்பெருக்கு என்றாலே நம் நினைவிருக்கும் முதலில் வருவது தாலி கயிறு மாற்றுதலாகும். புதிதாக திருமணமான தம்பதியினர் இந்த நன்னாளில் தாலி கயிறு மாற்றிகொள்வது வழக்கம். அவ்வாறு செய்கின்ற பொழுது குடும்பத்தில் மகிழ்ச்சியும் கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் உண்டாகும்.

என்ன பொருட்கள் வாங்கலாம்:
ஆடிப்பெருக்கு நாளில் தங்கும் வாங்கினால் மிகச் சிறப்பு என்று கூறுகிறார்கள். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாளில் தங்கம் வாங்கினால் மேலும் செல்வம் சேரும் என்பது நம் நம்பிக்கை. ஆனால் தங்கம் வாங்க முடியாதவர்கள் கல் உப்பு, மஞ்சள் வாங்குவதும் நமக்கு வீடுகளில் செல்வத்தை உண்டு செய்யும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |