நடக்க போகும் ராகு பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்? உங்கள் ராசி உள்ளதா?
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது பகவான் நிழல் கிரகமாக இருக்கிறார்கள். இவர்கள் நிழல் கிரகமாக இருந்தாலும் அவர்களுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் மற்ற ஏழு கிரகங்களுக்கும் இருக்கும். அப்படியாக ராகு மற்றும் கேது பகவான் இவர்கள் இருவருமே எதிர்மறை தாக்கத்தை தான் கொடுப்பார்கள் என்று பலரும் நினைப்பது உண்டு.
ஆனால் இவர்கள் நேர்மறையான விளைவுகளையும் பல நேரங்களில் கொடுக்கிறார்கள். அப்படியாக வருகின்ற மார்ச் 29ஆம் தேதி ராகு பகவான் சதய நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் இடம் மாறுகிறார்.
இது அனைத்து ராசியினருக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அதிலும் குறிப்பாக நான்கு ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை செய்யப்போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் மிகவும் சாதகமான நிலையை செய்யப் போகிறார். இவர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் குடும்பத்தில் ஒரு தெளிவான மனநிலையை கொடுத்து வெற்றியை கொடுக்கப் போகிறார்.
பணியிடங்களில் கூடுதல் பொறுப்பு உண்டாகும். வியாபாரம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் அமையப்போறது. மகிழ்ச்சியான மனநிலை கிடைக்கப் போகிறது.
கடகம்:
கடக ராசி காரர்களுக்கு ராகு பகவான் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளை உடைத்து அவர் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறார். புதிய பொறுப்புகள் இவர்களை தேடி வரும்.
அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்வீர்கள். உயர் கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஒரு நேர்மறையான தாக்கத்தை கொடுக்கப் போகிறார். இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் திருமண தடைகளை உடைத்து நல்ல திருமண வரன் கொடுக்க இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகளும் குடும்பத்தினர் உங்களைப் புரிந்து நடந்து கொள்ளும்படியான ஒரு சூழ்நிலையையும் அவர் உருவாக்கப் போகிறார். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |