சனியின் வக்ர பெயர்ச்சி: உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள்.. யார் தெரியுமா?
வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி அன்று சனி பெயர்ச்சி நடைபெற்றது. சனிபகவான் அடுத்த இரண்டரை காலம் வரை மீன ராசியில் இருப்பார். மேலும், 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை மீன ராசியில் இருப்பார்.
பிறகு சனியின் வக்கிர பயணம் ஆனது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுக்கப் போகிறார் சனிபகவான். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு சனியின் வக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு ஒரு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக நீங்கள் உயர்ந்த இடத்திற்கு செல்ல போகிறீர்கள். வாழ்க்கை துணையுடன் அழகான நேரத்தை செலவு செய்வீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்கு சனியின் வக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வை கொடுக்க போகிறது. நீண்ட நாள் கடன் தொல்லையில் இருந்து விடுபட போகிறீர்கள். சொந்தக்காரர்கள் மத்தியில் உங்களுக்கு ஒரு சிறந்த மதிப்பும் உயர்வும் கிடைக்கப்போகிறது. எந்த துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் மிகப் பெரிய அளவில் உயரத்தை தொட போகிறீர்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்கிர பெயர்ச்சியானது இவர்களுக்கு நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. உடல் ஆரோக்கியத்தை நல்ல மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கும். வாழ்க்கையில் அமைதியான நிலையை அடைவீர்கள். வேலையில் முன்னேற்றமும் உங்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும். சிறந்த விஷயங்களை செய்து சமுதாயத்தில் நற்பெயர்களை பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |