வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டாலும் தன்னை திருத்தி கொள்ளாத 3 ராசிகள்
மனிதர்கள் இயல்பு தவறு செய்வது என்றாலும் அதை ஒரு கட்டத்திற்கு மேல் கட்டாயம் நாம் திருத்தி கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்தி கொள்ளவில்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் துன்பத்தை சந்திக்கக்கூடும்.
அப்படியாக, ஜோதிடத்தில் இயல்பாகவே சில ராசிகள் எவ்வளவு அடிபட்டாலும் தங்களை திருத்தி கொள்ளாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசி மிகவும் மென்மையான குணம் படைத்தவர்கள். மேலும், இவர்கள் நல்ல அறிவாளியாக இருந்தாலும், ஒரு முறை தவறு செய்து தோல்வி அடைந்தாலும் அதை மறந்து மீண்டும் அதே தவறை செய்வார்கள். இவர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பதை மறந்து விட்டு, மறக்கவேண்டியதை எப்பொழுதும் நினைத்து கொண்டு இருப்பது தான் அவர்களின் தோல்விக்கு காரணமாகும்.
மிதுனம்:
மிதுனம் பொதுவாக இரட்டை குணம் படைத்தவர்கள். இவர்கள் தெளிவான மனநிலையில் இருக்க மாட்டார்கள்.ஆதலால் அவர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் கவனத்திற்கு எடுத்து செல்ல மாட்டார்கள். இவர்களுக்கு அவர்களை பற்றியே ஒரு தெளிவான சிந்தனை இருக்காது. ஆதலால் இவர்கள் எடுக்கும் முயற்சிகளில் தடுமாற்றங்களை சந்திக்கிறார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் எதையும் சரி சமமாக பார்க்கும் மன நிலை படைத்தவர்கள் என்றாலும், இவர்கள் அறிவு சார்ந்த விஷயங்களை தாண்டி உணர்வு சார்ந்த விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆதலால், இவர்கள் ஒரு முறை தான் செய்த தவறை உணராமல் அந்த தவறால் இவர்கள் பெரும் இழப்பையும் அவமானத்தையும் சந்தித்த பிறகே இவர்கள் திருத்தி கொள்ள முயல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |