ஒருவருக்கு பிரச்சனை என்றால் யோசிக்காமல் உதவும் 3 ராசிகள் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் 12 ராசிகளும் தனி தன்மை வாய்ந்தது. அதில் குறிப்பிட்ட சில ராசிகள் பிறருக்கு பிரச்சனை என்றால் யோசிக்காமல் முன் வந்து உதவுவார்கள். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இயற்கையாகவே தாயுள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் யாரேனும் துன்பத்தில் தவிக்கிறார்கள் என்றால் அவர்களை அவ்வாறே விட்டு செல்ல மனம் வராதவர்கள். எதையும் பற்றி சிந்திக்காமல் உதவி செய்வதில் இவர்கள் முதல் இடம் என்றே சொல்லலாம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலியானவர்கள். இவர்கள் ஒரு பிரச்சனையை ஆராய்ச்சி செய்து அதற்கு தகுந்தாற் போல் தீர்வு கண்டுபிடிப்பவர்கள். அதனால் பிரச்சனை என்று இவர்களிடம் போனால் அதற்கான நல்ல தீர்வை கொடுப்பதோடு உடன் நின்று உதவி செய்வார்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே பிறருக்கு உதவும் குணம் படைத்தவர்கள். இவர்களுக்கு எப்பொழுதும் பிறர் கஷ்டப்படுவதை பார்த்தால் பிடிக்காது. அவர்கள் தங்கள் கஷ்டத்தை தாண்டிலும் பிறர் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவர்களை தேடி சென்று உதவி செய்து அவர்கள் உடன் காலம் முழுவதும் பயணம் செய்யக்கூடியவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |