இன்று வைஷாக அமாவாசை.., அதிர்ஷ்டத்தின் உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்
12 Rasi Palangal Tamil
By Yashini
இந்து பண்டிகையில் அமாவாசை நாள் முக்கிய நாளாக கருதப்படுகிறது.
அதுவுமில்லாமல், தானம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
வைஷாக் மாதம் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்து மதத்தில் மற்ற மாதங்களை விட வைஷாக மாதம் சிறப்பு வாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனாலேயே இந்த மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பாக பேசப்படுகிறது.
ஆனால் இந்த வருடம் வரும் வைஷாக அமாவாசை கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இந்த நாளில் 3 மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வருகிறது.
மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக இருக்கும்.
- இன்று அவர்கள் எது செய்தால் நன்மையிலேயே முடியும்.
- புதிய வருமானத்திற்கு வழிகள் கிடைக்கும். செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு அமாவாசை அன்று மிகப்பெரிய சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
- வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
- ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கும்பம்
- அமாவாசை நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும்.
- வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிய வேலை தொடங்கியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US