வக்ர நிலையில் சனி.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் மிகவும் மெதுவாக நக்க கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
தற்போது சனி பகவான் கும்ப ராசியில் தன் ஆளுகையைச் செலுத்தி வருகிறார்.
சனி பகவான், ஜூன் 29ஆம் தேதியான இரவு 12:35 மணிக்கு வக்ரமாகப் பெயர்கிறார். இந்த நிலையில் கும்ப ராசியில் நவம்பர் 15ஆம் தேதி வரை நீடிக்கும்.
சனியின் இந்த வக்ர நிலையால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கன்னி
- பணியிடத்தில் வெகுநாட்களாக முயற்சித்துக் கொண்டிருந்த டிரான்ஸ்ஃபர் கிடைக்கும்.
- அதேபோல், நீண்டநாட்களாக நடக்காமல் இருந்த திருமணம், குழந்தைப்பேறு ஆகியவை இனிமேல் வாய்க்கும்.
- வெகுநாட்களாக இருந்த சண்டை சச்சரவுவுடன் இருந்த குடும்ப உறுப்பினர்கள் பகை நீங்கி, உறவாடுவர்.
- இந்த காலகட்டத்தில் வீடு இல்லாதவர்கள் வீடு வாங்கும் யோகமும், வாகனங்கள் இல்லாதவர்கள் வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.
- பணியிடத்தில் உங்களைப் பகைவர்களாகப் பார்த்தவர்கள், நண்பர்களாகப் பார்க்கும் நிலையும் ஏற்படும்.
- ஆனாலும் சில பிரச்சனைகள் வரும்போது வாயைத் திறக்காமல் இருந்தால் தேவையற்ற பிரச்னைகளில் இருந்து தப்பலாம்.
- திருமணம் ஆகிய மனைவிமார்கள், குழந்தைகளை விட்டுப் பிரிந்து சென்று, மேற்படிப்பு படிக்கும் சூழல் உண்டாகும்.
துலாம்
- தொலைத்த பணத்தைப் பெறுவீர்கள்.
- சனி பகவானால் நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் கைகூடும்.
- இத்தனை நாட்களாக,தொழிலில் இருந்த மந்தத்தன்மை மாறும்.
- தொழில் முனைவோருக்கு, புதிய வாடிக்கையாளர்களால் லாபம் கிடைக்கும்.
- வெகுநாட்களாக இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு நினைத்த வீட்டு உபயோகப்பொருட்களை வாங்குவீர்கள்.
மீனம்
- நீண்டநாட்களாக கிடைக்கவேண்டிய பணம் கைவந்து சேரும்.
- இந்த காலகட்டத்தில் இருந்த நிதிச்சுமை பிரச்னைகள் குறையும்.
- வியாபாரம் செய்பவர்களுக்கு இனிமையான பேச்சினால் நன்மை கிடைக்கும்.
- இந்த காலகட்டத்தில் உங்களது பணியிடத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |