சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

By Yashini Jun 02, 2024 08:15 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து வருகின்றனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஜூன் 4-ம் திகதி பிரதோஷம், ஜூன் 6-ம் திகதி அமாவாசை வழிபாடு நடைபெறுகிறது.

சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி | 4 Days Permit To Visit Sathuragiri Temple

இதனை முன்னிட்டு ஜூன் 4 -ம் திகதி முதல் 7-ம் திகதி வரை 4 நாட்கள் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

இப்படி அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராத விதமாக திடீரென மழை பெய்தாலும், ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகரித்தாலும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி | 4 Days Permit To Visit Sathuragiri Temple

பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பக்தர்கள் இரவில் கோயில் வளாகப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US