2026: ஆடி மாதம் எப்பொழுது? ஆடி 1ஆம் தேதி இந்த 6 பொருட்களை வாங்க தவறாதீர்கள்..

By Sakthi Raj Jul 14, 2026 07:40 AM GMT
Report

ஆன்மீகத்தில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாக உள்ளது. இந்த நாளில் செய்யக்கூடிய எல்லா வழிபாடுகளுக்கும், பல மடங்கு பலம் உண்டு என்பது நம்பிக்கை.

அதனால், இந்த ஆடி மாத துவக்கத்திலிருந்து பெண்கள் பலரும் தங்களுடைய குடும்ப நலனுக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் ஆடி ஒன்றாம் தேதியை நாம் வரவேற்கும் வகையிலும் வீடுகளில் இறை அருள் நிலைத்து நிற்கவும் நாம் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.

2026: ஆடி மாதம் எப்பொழுது? ஆடி 1ஆம் தேதி இந்த 6 பொருட்களை வாங்க தவறாதீர்கள்.. | 6 Spiritual Things Must Buy On 2026 Aadi 1St Day

2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அது 17 ஆகஸ்ட் திங்கட்கிழமை அன்று முடிவடைகிறது. இந்த ஆடி மாதத்தின் முக்கியத்துவம் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது.  அந்த வகையில் ஆடி மாதத்தில் வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களை பற்றி பார்ப்போம்.

1. ஆடி மாதம் முதலில் அம்மன் வழிபாடு மிகச் சிறப்பாக துவங்குகிறது. ஆதலால், இந்த மாத துவக்கத்தின் பொழுது வீடுகளில் மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு ஆகியவை பூஜை அறையில் வாங்கி வைத்து வழிபாடு செய்வது குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டு செய்யும்.

குரு தோஷம் போக்கும் தென்குடி திட்டை – சூரிய, சந்திரர் வணங்கிய சிவஸ்தலம்

குரு தோஷம் போக்கும் தென்குடி திட்டை – சூரிய, சந்திரர் வணங்கிய சிவஸ்தலம்

2. ஆடி மாதத்தில் நம்முடைய குடும்பத்தில் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவதற்கு கல் உப்பு வாங்கி வைப்பது நன்மை தரும்.

3. ஆடி மாதம் முதல் நாள் வீடுகளில் வெற்றிலை பாக்கு வாங்கி வைத்து குலதெய்வ வழிபாடு செய்வது குலதெய்வத்தின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கும்.

4. ஆடி மாதம் முதல் நாள் வீடுகளில் பொங்கல் வைப்பதற்கு வெல்லம், ஏலக்காய் வாங்கி வைப்பது சிறந்தது.

2026: ஆடி மாதம் எப்பொழுது? ஆடி 1ஆம் தேதி இந்த 6 பொருட்களை வாங்க தவறாதீர்கள்.. | 6 Spiritual Things Must Buy On 2026 Aadi 1St Day

ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?

ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?

5. ஆடி மாதத்தில் அம்மனுடைய வழிபாடு சிறந்தது என்பதால் அம்மனுக்கு ஆடி மாதத்தில் பல ஆலயங்களில் கண்ணாடி வளையல் சாற்றி வழிபாடு மேற்கொள்வார்கள்.

அந்த வகையில், ஆடி மாதம் முதல் நாளில் அம்மனுக்கு பிடித்த கண்ணாடி வளையல் வாங்கி வைத்து வழிபாடு செய்வது மிக உகந்ததாக கருதப்படுகிறது.

6. முக்கியமாக, ஆடி மாதம் முதல் நாள் நம்முடைய வசதிக்கு ஏற்ப தானம் செய்து வழிபாடு செய்வது பெரும் புண்ணியத்தை பெற்றுக் கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US