வாழ்க்கையில் தவறியும் மற்றவர்களிடம் பகிரவேக்கூடாத 8 விஷயங்கள்
இந்த பூமியில் எதை செய்தாலும் அதற்கு எதிர்வினை இருக்கிறது. அப்படியாக, நாம் நன்மையே செய்தும் எப்பொழுதும் நல்லதே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் ஒரு சிலரின் தீய எண்ணங்களின் அதிர்வலைகள் நம்மை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். அப்படியாக, நம்முடைய வாழ்க்கையில் நாம் தவறியும் மற்றவரிடம் பகிரவே,க் கூடாத 10 விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
1.நாம் எந்த நிலையிலும் கடவுளிடம் வைக்கும் வேண்டுதல்கள் பிறரிடம் பகிரக் கூடாது. அவ்வாறு சொல்லும் பொழுது அவை பலிக்காது.
2. நம் வீடுகளில் எந்த ஒரு சுபகாரிய நிகழ்வுகளும் உறுதி ஆகும் வரை மற்றவரிடம் பகிரக்கூடாது.
3. எந்த சூழ்நிலையிலும் மற்றவரிடம் கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டை மற்றும் காதல் வாழ்க்கையை பற்றி பிறரிடம் பகிரக்கூடாது.
4. எந்த காலகட்டத்திலும் நாம் ஒருவருக்கு செய்த உதவியை பிறரிடம் சொல்லிக்காட்டக்கூடாது.

5. வீடு, நிலம், தங்க நகைகள் எதுவும் நாம் வாங்க செல்லும் முன் மற்றவரிடம் பகிரக்கூடாது.
6. அதேபோல் எந்த சூழ்நிலையிலும் நாம் வாங்கும் வரவு செலவுகளை பிறரிடம் பகிரக்கூடாது.
7. ஒரு பெண் தாய்மை அடைந்தவுடன் அதை மூன்று மாதம் வரை வெளியே சொல்லக்கூடாது.
8. அதேபோல் ஒருபொழுதும் நாம் காலத்திலும் நாம் சம்பாதிப்பது பிறரிடம் பகிரக்கூடாது.
மனிதர்களுடைய கண் பார்வையும் சிந்தனையும் எப்பொழுதும் ஒரே போல் இருப்பது இல்லை. நாம் இயல்பாக பகிர்ந்து கொள்ளும் விஷயம் கூட அவர்களின் தீய எண்ணங்கள் மற்றும் சிந்தனையால் பாதிக்கச்செய்யக்கூடும். ஆதலால் கவனமாக ஒருவரிடம் பழகுவது அவசியம் ஆகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |