நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்பது வகையான பக்தி
பக்தி என்பது நாம் இறைவனின் மீது நம்பிக்கை வைத்து உள்ளம் அறிந்து உலகம் தெளிந்து அவன் பாதம் சரண் அடைவது ஆகும்.அப்படியாக அந்த பக்தி ஒன்பது வகை படும்.அதை பற்றி பார்ப்போம்.
1.அனுமானை போல பகவானின் கதையை கேட்பது ஒரு பக்தி அதற்கு பெயர் சிரவணம்
2.வால்மீகியை போல பகவானின் பெருமைகளை பேசுவது ஒரு பக்தி அதற்கு பெயர் கீர்த்தனம்
3.சீதையை போல பகவானை நினைத்து கொண்டு இருப்பது ஒரு பக்தி அதற்கு பெயர் ஸ்மரணம்
4.விபீஷணனை போல பகவானை வணங்குவது ஒரு பக்தி அதற்கு பெயர் வந்தனம்
5.சபரியை போல மலர்களும் பழங்களும் தருவது ஒரு பக்தி அதற்கு பெயர் அர்ச்சுனம்
6.பரதனை போல பகவானின் காலடியில் இருப்பது அல்லது வணங்குவது ஒரு பக்தி அதற்கு பெயர் பாதவேனம்
7.லட்சுமணனை போல பகவானுக்கு பணிவிடை செய்வது ஒரு பக்தி அதற்கு பெயர் தாஸ்டயதட
8.சுக்ரீவனை போல பகவானிடம் நட்பு கொள்வது ஒரு பக்தி அதற்கு பெயர் ஸ்க்யம்
9.ஜடாயுவை போல பகவானுக்காக தன் உயிரையும் தருவது ஒரு பக்தி அதற்கு பெயர் ஆத்ய நிவேதனம்
இப்படி பலரும் தங்களுடைய பக்தி வெளிப்படுத்துகிறார்கள்.நாமும் வந்த இந்த உலகத்தில் சிறிது காலம் தான் அதை உணர்ந்து யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ்ந்து சென்று விடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |