ஆடி முதல் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு

By Sakthi Raj Jul 18, 2024 07:00 AM GMT
Report

ஆடி மாதம் பிறந்து முதல் வெள்ளிக்கிழமை (19-07-2024) அன்று மூன்று சிறப்புகளை கொண்டு இருக்கிறது.முதல் சிறப்பு அம்பாளுக்குரிய ஆடி முதல் வெள்ளிக்கிழமை.

அன்று தான் அம்பாள் அவதரித்த நாள். இரண்டாவது சிறப்பு பிரதோஷம். சிவனையும் சக்தியையும் சேர்ந்து தரிசனம் செய்யக்கூடிய பாக்கியம் நமக்கு கிடைக்கும்.

மூன்றாவது சிறப்பு மூலம் நட்சத்திரம். அந்த அனுமனுக்கு உரிய நட்சத்திரமாக இது அமைந்துள்ளது. அனுமனுடைய 10 கரங்களில் ஒரு கரத்தில் அம்பாளது சூலாயுதமும் இருக்கும்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு | Aadi Muthal Vellikilamai Amman Vazhipaadu

கவனித்துப் பார்த்தால் உங்களுக்கு தெரியும். அந்த அம்பாளின் அனுகிரகம் பெற்ற கடவுள் அனுமன். அம்பாளிடம் இருந்து வரம் பெற இந்த நாளை நாம் தவறவிடவே கூடாது.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை என்றாலே பெண்கள் வழிபாடு செய்வதற்கு உரிய தினமாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக திருமணம் நடக்காத பெண்கள், திருமணம் நடந்தும் மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் எல்லாம் இந்த ஆடி வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்தால் போதும்.

7 கிழமைகளில் இந்த கிழமை மாத்திரம் எந்த பொருளும் வாங்காதீங்க- துரதிஷ்டம்

7 கிழமைகளில் இந்த கிழமை மாத்திரம் எந்த பொருளும் வாங்காதீங்க- துரதிஷ்டம்


குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும்.திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறுவார்கள்.

அப்படியதாக இப்பொழுது ஆடி வெள்ளிக்கிழமை எப்படி வழிபாடு செய்யலாம் என்று பார்ப்போம்.

ஆடி வெள்ளி அன்றி வீட்டில் விளக்கு ஏற்றி அம்பாளை வணங்க வேண்டும் சர்க்கரை பொங்கல் வடை நெய்வேதியம் செய்து கொள்ளலாம்.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய வழிபாடு | Aadi Muthal Vellikilamai Amman Vazhipaadu

உங்களுடைய வீட்டிற்கு மூன்று சுமங்கலி பெண்கள், அல்லது ஐந்து பெண்கள் இந்த எண்ணிக்கையில் அழைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் குங்குமப்பொட்டு கொடுத்து வரவேற்க வேண்டும்.

பிறகு செய்த சர்க்கரை பொங்கலையும் வடையையும் பிரசாதமாக பகிர்ந்து கொள்ளவேண்டும். அம்மனுக்கு உரிய ஒரு பிரசாதம் பானகம்.

அம்மனை குளிர வைக்கக்கூடிய தன்மை இந்த பானகத்திற்கு தான் உண்டு. ஆடி முதல் வெள்ளிக்கிழமை நீங்கள் செய்த பிரசாதத்தோடு, பானகமும் தயார் செய்து கொள்ளலாம்.

வரக்கூடிய வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு பானகம் தானமாக கொடுக்கும் பொழுது அம்பாள் மனம் குளிரும்.

மாங்கல்ய தோஷம் விலகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US