வீட்டில் உண்டாகும் அபசகுணங்களை நீக்க உதவும் பரிகாரம்

By Yashini Jul 19, 2024 11:45 AM GMT
Report

பொதுவாக வீட்டில் ஏதாவது தீமைகள் நடைபெறப் போகிறது என்றால் அதற்கு முன்பு சில சகுனம் மூலம் தெய்வங்கள் உணர்த்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக கண்ணாடி உடைதல், எண்ணெய் கொட்டுதல், குங்குமம் கீழே சிதறுதல் இப்படி சில சகுனங்களை அபசகுணங்கள் என்று கூறுவோம்.

இப்படி ஏதாவது அபசகுனங்கள் நிகழ்ந்தால் துன்பங்கள் நிகழப்போகிறது என்று மன வருத்தத்துடன் இருப்போம்.

வீட்டில் உண்டாகும் அபசகுணங்களை நீக்க உதவும் பரிகாரம் | Abasakunam Neega Bhairavar Vallipadu In Tamil

அந்த சமயத்தில், காலபைரவரை நினைத்து பரிகாரத்தை செய்தால் சஞ்சலங்கள் நீங்கி தீமைகள் ஏதும் நடைபெறாமல் இருக்கும். 

காலபைரவர் பரிகாரம்

ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும் மஞ்சளும் இருந்தால் போதும்.

மஞ்சளில் சிறிது பன்னீரை ஊற்றி நன்றாக குழைத்து அதில் பச்சரிசியை போட்டு கலந்து அட்சதையாக தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த அட்சதியை நம்முடைய வீட்டு வாசலில் இரண்டு புறங்களிலும் "ஓம் காலபைரவரை போற்றி" என்று காலபைரவரை மனதார நினைத்துக் கொண்டு வைக்க வேண்டும்.  

வீட்டில் உண்டாகும் அபசகுணங்களை நீக்க உதவும் பரிகாரம் | Abasakunam Neega Bhairavar Vallipadu In Tamil

இதே போல் நம்முடைய வீட்டு நிலை வாசலிலும் காலபைரவரை போற்றி என்று பைரவரை நினைத்து இரண்டு புறமும் வைக்க வேண்டும்.

ஒரு கலச செம்பில் சுத்தமான தண்ணீரை எடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து துளசி இலைகளை கொண்டு வீடு முழுவதும் இந்த தண்ணீரை பைரவரின் மந்திரத்தை கூறியவாறு தெளிக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய தீமைகளில் இருந்து காலபைரவர் நம்மை பாதுகாத்து நமக்கு காவலாக வீற்றிருப்பார். 

இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டுமானாலும் வீட்டில் செய்யலாம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US