பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர செய்யவேண்டிய எளிய சக்தி வாய்ந்த பரிகாரம்
வாழ்க்கையில் சமயங்களில் கிரகங்கள் சரியில்லை என்றால் நிச்சயம் அந்த இடத்தில் சரியாக இருந்த விஷயம் கூட தவறாக செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதாவது கணவன் மனைவியாக இருவரும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள் ஆனால் திடீரென்று அவர்கள் இடையே எப்படி விரிசல் ஏற்பட்டு ஏற்பட்டது என்று நம்மால் கணிக்க முடியாது பிரிந்து விடுவார்கள்.
இதற்கெல்லாம் கிரக சூழ்நிலைகள் காரணமாக இருக்கிறது. இவ்வாறான நேரங்களில் நாம் இறைவனை நம்புவதை தவிர வேறு வழி இல்லை. அப்படியாக பிரிந்த தம்பதிகள் ஒன்று இணையவும் நினைத்த காரியம் நமக்கு கை கூடி வரவும் பாட வேண்டிய அபிராமி பாடலை பற்றி பார்ப்போம்.

மந்திரம்:
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம்,
என்தன், விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,
விழியால் மதனை, அழிக்கும் தலைவர்,
அழியா விரதத்தை அண்டம் எல்லாம்,
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே.
இந்த பாடலை நீங்கள் தினமும் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு மனதார அம்பிகையை நினைத்து தொடர்ந்து பாடி வர நிச்சயம் பிரிந்த தம்பதிகள் மனதில் ஒரு நல்ல விதமான மாற்றங்கள் உருவாகி அவர்கள் வெகு விரைவில் இணைந்து இணை பிரியாத தம்பதிகளாக வாழ்வதற்கு எல்லா அருளும் அன்னை அபிராமி வழங்குவார். இதை நாம் முழு மனதார அவளை சரணடைந்து பாராயணம் செய்யும்பொழுது அதற்குரிய பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |