புரட்டாசி பிரதோஷம்: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

By Yashini Sep 13, 2024 10:29 AM GMT
Report

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

புரட்டாசி பிரதோஷம்: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி | Allowed To Visit Chaturagiri Temple For Puratasi

இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலை ஏற வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.  

பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

புரட்டாசி பிரதோஷம்: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி | Allowed To Visit Chaturagiri Temple For Puratasi

மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும்.

குறிப்பாக பக்தர்கள் இரவில் தங்கக்கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US