விஸ்வரூப தரிசனத்தால் ஏற்படும் நன்மைகள்

By Sakthi Raj Jul 13, 2024 11:41 AM GMT
Report

இறைவன் அவனை பார்த்தாலே அனைத்து துன்பங்களும் விலகிவிடும்.அப்படி இருக்க இறைவன் நமக்கு ஒவ்வொரு கோலத்திலும் காட்சி கொடுக்கிறார்.

அதிலும் விஸ்வரூபம் தரிசனம் பற்றி பலர் கேள்வி பட்டு இருக்கலாம்.சிலருக்கு தெரிந்து இருந்தும் இதன் பெயர் தான் விஸ்வரூபம் தரிசனம் என்று தெரியாமல் இருக்கலாம்.

அப்படியாக விஸ்வரூபம் தரிசனம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

விஸ்வரூப தரிசனத்தால் ஏற்படும் நன்மைகள் | Athigalai Muthal Tharisanam Iraivan Vazhipaadu

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலையில் இறைவனைக் காணும் முதல் தரிசனம் என்பது ஆகும்.அதாவது, இறைவனை திருமஞ்சனத்திற்கு முன்னே அவரது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசனம் செய்வது ஆகும்.

திருமஞ்சனம் என்னும் சொல் இறைவனுக்கு நீராட்டுதலைக் குறிக்கும். மற்ற தரிசனத்திற்கும் விஸ்வரூப தரிசனத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் நாம் இறைவனைக் காண்பது தரிசனம்.

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு

பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு


ஆனால், இறைவன் நம்மைப் பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலையில் முதல் முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும் தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார் அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும் அதுதான் விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பு.

மேலும் ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு விஸ்வரூப தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.அப்படி இருக்க முதல் தரிசனமாக இந்த விஸ்வரூப தரிசனம் செய்து நம் வாழ்க்கையில் இறை அருளை முழுமையாக பெறுவோம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US