2025-ல் அடுத்த அடுத்த போர் என்று அன்றே கணித்த பாபா வாங்கா- இனி நடக்கப்போவது என்ன?
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருக்கின்றனர். அதில் பாபா வாங்காவும் ஒருவர். இவருடைய கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. இவர் ஆண்டு தோறும் அந்த ஆண்டு நடக்க இருக்கும் கணிப்புகளை துல்லியமாக கணித்து இருப்பதுதான் அனைவரையும் வியப்பிலும் அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் ஒரு புயலின் காரணமாக அவரின் பார்வையை இழந்தார். பார்வையை இழந்த அவருக்கு எதிர்காலத்தை கணித்து சொல்லக்கூடிய சக்தி கிடைத்தது. அதை வைத்து அவர் இறக்கும் முன்பு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார்.
அவ்வாறு அவர் எழுதிய கணிப்புகள் பல இடங்களில் நடந்து உள்ளது என்பது தான் ஆச்சரியத்திற்கான விஷயம். அதனால் உலகம் எங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் முன்பும் பாபா வாங்காவின் கணிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.
இந்நிலையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் என்னவென்று பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பொறுத்த வரையில் பாபா வாங்காவின் கணிப்புகள் சற்று அச்சுறுத்தும் விதமாகவே இருக்கிறது.
ஏனென்றால், 2025ஆம் ஆண்டு உலக அழிவு தொடங்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். அதோடு,5079ஆம் ஆண்டு உலகம் முற்றிலும் அழிவை சந்தித்திருக்கும் என்றும் அவர் கணித்து உள்ளார்.
அப்படியாக, 2025 ஆம் ஆண்டு பாபா வாங்கா கணித்தப்படி பெரிய மோதல்கள், சோகமான சம்பவங்கள், போர் சம்பவங்கள் நடைபெறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஐரோப்பாவில் ஒரு பேரழிவுக்கான மோதல் ஏற்படும் என்றும், அந்த மோதல் ஐரோப்பிய கண்டத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணித்துள்ளார்.
அவர் கணித்தது போல் உலகம் எங்கிலும் போர் பதற்றம் நிலவி வருவதால் மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இவர் கணித்தது போல் இன்னும் வரும் ஆண்டுகளில் நாம் என்ன விஷயங்கள் எல்லாம் சந்திக்க உள்ளோம் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |