பிரச்சனைகள் விலக ஒருமுறை இந்த பூஜையில் கலந்து கொண்டால் போதும்
மனிதர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது இயல்பான ஒரு விஷயம் என்றாலும், வரும் பிரச்சனைகளை நாம் தடுக்கமுடியாது ஆனால் அதை கடக்கும் பக்குவத்தையும் சமாளிக்கும் திறனையும் பெற்று கொள்ள முடியும். காரணம், விதி அதனுடைய வேலையை செய்தே தீரும்.
அந்த வகையில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை போராடி வெல்ல இந்த ஒரு பூஜையில் கலந்து கொண்டால் போதும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மேலவாசல் பிரசன்ன விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது.
இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. அதை தொடர்ந்து 48 நாட்கள் ஸ்வாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், கும்பாபிஷேகம் அன்று ஸ்வாமிக்கு அஷ்ட பந்தன என்னும் மருந்து வைக்கப்பட்டது என்றும் அந்த மருந்து உருகும் என்றும் சொல்கிறார்கள்.
அதோடு இந்த காலகட்டத்தில் ஸ்வாமிக்கு எண்ணெய், பால், பன்னீரில் மட்டுமே அபிஷேகம் செய்வதாகவும் பிற பொருட்களில் அபிஷேகம் செய்ய மாட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. காரணம், அந்த அஷ்டபந்தன மருந்து இறுக செய்வது அவசியம் என்கிறார்கள்.
அப்பொழுது தான் ஸ்வாமிக்கு கலசத்தில் இருந்து பூரண சக்தி கிடைக்கும் என்பதால். நாம் அந்த நேரத்தில் ஸ்வாமியை பிற நாட்களை விட அந்த காலகட்டத்தில் வழிபாடு செய்வது அதீத சக்திகளை கொடுக்கிறது என்பதால் பலரும் இந்த நாட்களில் வழிபாடு செய்ய வருவதாக சொல்கிறார்கள்.
மேலும், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற இந்த மண்டல பூஜையில் கலந்து கொள்வது சிறந்த பலனை கொடுக்கிறது.
அதோடு இக்கோயிலில் மண்டல பூஜை பல ஆண்டுளாக கொண்டாடப்படுவதாகவும் இதன் மூலம் 48 நாட்கள் வரை பக்தர்கள் தொடர்ந்து கோவிலுக்கு வழிபாடு செய்ய வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |