ஜோதிடம்: அஷ்டமத்து சனியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் ஆகும். மேலும், ஒருவர் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு இந்த திருமணம் ஆகும். அந்த திருமண வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டு விட்டால் கட்டாயம் அது மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகிறது.
இவ்வளவு முக்கியமான இந்த திருமண வாழ்க்கையை நாம் சரியான நேரத்தில் செய்வது இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படியாக, ஒருவர் திருமணம் செய்யவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவர்கள் கட்டாயம் அஷ்டமத்து சனியில் செய்யக்கூடாது என்கிறார்கள்.
அதாவது, கோட்சார கிரக நிலைகளில் சனியின் நிலைகள் அதிகமான பாதிப்பை எல்லோருக்கும் கொடுத்து விடுகிறது. மேலும், அஷ்டமம் என்பதற்கு எட்டு என்று பொருள். ஒருவருடைய ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 17 வது நட்சத்திரத்தில் அதாவது ஒருவருடைய ஜென்ம ராசியில் இருந்து எட்டாவது ராசியில் சனி பயணிக்கும் காலம் மிகவும் கடுமையான அஷ்டமத்து சனி காலமாகும்.
இந்த எட்டாம் இடம் தான் வம்பு, வழக்கு, அசிங்கம்,கேவலம், விபத்து, அடிதடி, கோர்ட்,போலீஸ் ஸ்டேஷன்,அவமானம் ஆகியவற்றையே குறிக்கும் நிலை ஆகும். அதனால் இந்த காலகட்டத்தில் நாம் குழந்தைகளுக்கு செய்யும் திருமணம் கண்டிப்பாக அசிங்கத்தையும், உறவுகள் இடையே பிரிவையும் கொடுத்து விடுகிறது.
தம்பதிகளில் யாருக்கு அஷ்டமத்து சனி நடக்கிறதோ அந்த நபரால் கண்டிப்பாக போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கேஸ்,பஞ்சாயத்து, விவாகரத்து போன்ற விஷயங்களுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்வார்.
அதனால், அஷ்டமத்து சனி காலங்களில் கட்டாயம் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இவ்வாறு செய்வதால் குடும்பமாக நாம் மன நிம்மதியுடன் வாழலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |