உங்கள் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைந்து இருக்கிறதா? இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஒருவர் ஜனன ஜாதகத்தில் ஆதவன், பாஸ்கரன், அரசன் என்று அழைக்கப்படும் சூரிய பகவானும், களத்திரகாரகன், அசுர குரு,வெள்ளி என்று அழைக்கப்படும் சுக்கிர பகவானும் இணைந்து இருந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று பார்ப்போம்.
பொதுவாக சூரியன் சுக்கிரன் இணைவு ஜாதகருக்கு திருமணத்தில் தாமத்தை உண்டு செய்யும். கட்டாயம் ஜாதகருக்கு திருமணத்திற்கு முன்பாக காதல் தோல்வி இருக்கும். ஆனால், இவர்களுக்கு திடீர் திருமணம், திடீர் தொழில் அமைப்புகள் போன்ற சூழ்நிலை உண்டாகும்.
இருப்பினும் இவர்கள் எப்பொழுதும் வரவிற்கு அதிகமான செலவுகளை சந்திப்பார்கள். இவர்களுக்கு கட்டாயம் திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். இந்த ஜாதகரின் மனைவி சிறந்த ஆளுமை தன்மையுடன் இருப்பார்.
அதனால் கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வதில் சில சிக்கலை சந்திக்கக்கூடும். மேலும், இவ்வாறு சூரியன் மற்றும் சுக்கிரன் அமைப்பு கொண்ட ஜாதகருக்கு தங்கள் வேலைக்காக தங்கள் துணையை பிரிந்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் வாழும் அமைப்பு உண்டாகும்.
அது மட்டும் அல்லாமல், ஜாதகரின் மனைவி அவரின் தந்தையின் மீது அதீத அன்போடு இருப்பார். சிலருக்கு ஜாதகரின் மனைவி அரசாங்க வேலையில் இருக்கும் வாய்ப்பு உண்டு. இருப்பினும் ஜாதகரின் வீட்டில் மனைவியின் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் அமைப்பு உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |