இந்த தெய்வங்களை வழிபாடு செய்யும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்
நம்முடைய இந்து மதத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கிறது. அப்படியாக, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய எந்த தெய்வங்களை எந்த சுழலில் வழிபாடு செய்தால் நன்மைகளும், நாம் சந்திக்கும் தடைகளும் விலகும் என்று பார்ப்போம்.
விநாயகர்:
ஒருவர் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளும், தாமதமும் சந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் கட்டாயம் விநாயகர் வழிபாடு செய்யவேண்டும். இவர் இடையூர்களை விலக்குபவர்.
திருமணத்தடை:
திருமணம் என்பது மிக மிக முக்கியமான நிகழ்வு. இவை பலருக்கும் ஒருவித கனவாகவே மாறிவிடும் போல் அவ்வளவு தாமதத்தை சந்திப்பார்கள். அவர்கள் கட்டாயம் சரண் அடைய வேண்டிய தெய்வம் முருகர் தான்.
லட்சுமி:
கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், பொருளாதார சிக்கலை சந்திப்பவர்கள் லட்சுமி தேவியை சரண் அடையாமல் எந்த ஒரு மாற்றமும் நடக்கப்போவது இல்லை.
சரஸ்வதி:
தெளிந்த ஞானமும், கல்வியும், கலைகளில் சிறந்து விளங்கவும் நாம் சரஸ்வதி தேவி வழிபாடு செய்வது மிக சிறந்த பலன் கொடுக்கும்.
சிவபெருமான்:
தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அடியோடு விலக சிவபெருமானை வழிபாடு செய்வது மட்டுமே ஒரே வழி.
பெருமாள்:
தொழிலில் முன்னேற்றம் அடையவும், வாழ்க்கையில் தர்மம் அதர்மங்கள் கற்று உணரவும் பெருமாள் வழிபாடு துணையாக அமையும்.
ஆஞ்சநேயர்:
எதிரிகளால் வலிமை இழந்து, உறவுகளால் துரோகம் சந்தித்தும், உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை சந்தித்து மீண்டு வரமுடியாமல் இருப்பவர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது அவர்களுக்கு இழந்த தைரியத்தை மீட்டுக்கொடுக்கும்.
தன்வந்திரி:
தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், கட்டாயம் தன்வந்திரி வழிபாடு செய்வது நல்ல மாற்றம் கொடுக்கும்.
துர்கை அம்மன்:
எதிரிகள் உங்களை வாட்டி வதைக்கும் பொழுது செய்வதறியாது நிற்கும் வேளையில் துர்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு மிக சிறந்த துணையாக அமையும்.
சந்தான லட்சுமி:
நீண்ட நாட்களாக குழந்தை வரன் இல்லாதவர்கள் கட்டாயம் வழிபாடு செய்யவேண்டிய தெய்வம் சந்தான லட்சுமி.
கஜலக்ஷ்மி:
புதிய தொழில் தொடங்கும் முன் இந்த அம்மனை வழிபாடு செய்து தொழில் தொடங்கினால் தொழில் மிக சிறப்பான முன்னேற்றம் பெரும்.
ருத்ரன்:
மரண பயம் மற்றும் நீண்ட ஆயுள் பெற இவரை வழிபாடு செய்யவேண்டும்.
ஐயப்பன்:
சனி பகவானால் கடும் தோஷத்தை சந்தித்தவர்கள் ஐயப்பனை வழிபாடு செய்ய அவர்களுக்கு சனியால் ஏற்பட்ட பாதிப்புகளும் தோஷமும் விலகும்.
நரசிம்மர்:
கடன் பிரச்சனைகள் நீங்கவும், வீட்டில் தீய சக்திகளின் ஆற்றல் விலகவும் இவரை வழிபாடு செய்வது மிக சிறந்த பலனைக்கொடுக்கும்.
தட்சிணாமூர்த்தி:
ஒரு சிலருக்கு ஜாதகத்தில் குருவால் தோஷம் ஏற்பட்டு இருக்கும். அவர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது அவர்களுக்கான குரு தோஷத்தை போக்கி சிறப்பான வாழ்க்கை அமையும்.
மங்கள கௌரி:
பெண்களுக்கு திருமாங்கல்யம் நிலைக்க மங்கள கௌரியை வழிபாடு செய்வது அவர்கள் குடும்பத்தில் சந்தோஷத்தை பெற்றுக்கொடுக்கும்.
காளி:
போட்டி பொறாமையால் சிலருக்கு பில்லி சூனியம் போன்ற செய்வினையை செய்து விடுவார்கள். அவர்கள் காளி தேவியை சரண் அடைய அம்மனின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து தீய சக்திகளும் விலகி சந்தோசம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |