ஜோதிடம்: இந்த ராசி பெண்களிடம் சாமர்த்தியம் பலிக்காதாம் யார் தெரியுமா?
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அப்படியாக, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்களை நாம் எவ்வளவு சாமர்த்தியமாக பேசி =காரியம் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களிடம் அது பலிக்காது என்று சொல்லப்படுகிறது.அவர்கள் யார் என்று பார்ப்போம்.
மகரம்:
இவர்கள் எப்பொழுதும் பொறுமை அதிகம் கடைபிடிப்பதால் இவர்களிடம் நம் என்ன நாடகம் போட்டாலும் அவை அவர்களுடைய மனதை திசை தடுமாற செய்வதில்லை.
மிதுனம்:
இவர்கள் எல்லா விஷயத்திலும் அவர்களுடைய ஒரு கண் வைத்திருப்பதால் இவர்களை ஏமாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும்.
விருச்சிகம்:
இவர்கள் எதையும் நுணுக்கமாக சிந்திக்க கூடியவர். ஒருவருடைய உடல் மொழியை வைத்தே அவர்கள் உண்மை பேசுகிறார்களா என்பதை கணித்து விடுவார். இவர்களைஏமாற்றுவது கடினம்.

ரிஷபம்:
மிகவும் நேர்மையாக செயல்பட கூடியவர்கள் என்பதால் யார் எப்படி என்று பார்த்த நொடியில் கணக்கு போடக் கூடியவர்கள்.
இருப்பினும் சில ராசியினர் வெள்ளந்தியான குணம் கொண்டவர்களாக இருக்கிறார். அவர்களை மென்மையாக பேசினாலே கரைந்து விடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால் இவர்கள் ஒருவரிடம் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அந்த ராசியின் வரிசையில் துலாம், தனுசு, கடகம்உள்ளனர். இவர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆதலால், காலம் கடந்து யோசிப்பதற்கு முன்பாக இவர்கள் ஒருவரிடம் பழகும் பொழுது உணர்வ ரீதியாக நெருக்கம் காட்டாமல் நன்மை தீமையை ஆராய்ந்து சில நேரங்களில் சுயநலமாக பழகுவதே இவர்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |