ஜோதிடம்: 12 ராசிகளுக்கும் துணையாக நிற்கும் கடவுள்கள் யார் தெரியுமா?
மேஷம்:
மேஷ ராசியினருக்கு எப்பொழுதும் துணை நின்று வழி நடந்தும் கடவுள் முருகப்பெருமான். இவர்கள் இவரைப் பற்றிக்கொண்டால் நன்மை நடக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு எப்பொழுதும் உறுதுணையாக நின்று பாதுகாக்கும் தெய்வம் மஹாலக்ஷ்மி ஆவார். இவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மஹாலக்ஷ்மியை வழிபாடு செய்வது வந்தால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
மிதுனம்:
இவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள மன குழப்பங்கள் விலகி நல்வழியில் செல்ல புத்தர் அருள் புரிகிறார்.
கடகம்:
இவர்களுக்கு சிவப்பெருமானின் அருள் எப்பொழுதும் இருக்கும். சிவனை வழிபாடு செய்து வந்தால் இவர்களின் கஷ்டங்கள் யாவும் விலகும்.
சிம்மம்:
இவர்களுக்கு எப்பொழுதும் பிரகாசமான வாழ்வை வழங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர்கள் சூரிய வழிபாடு செய்து வந்தால் பெயரும் புகழோடும் வாழ்வார்கள்.
கன்னி:
இவர்கள் வாழ்க்கையை பல இன்னல்களில் இருந்து காக்கும் தெய்வமாக லட்சுமி தேவி இருக்கிறாள். இவர்கள் லட்சுமி தேவிக்கு பூஜை செய்து வந்தால் நல்ல மாற்றம் பெறுவார்கள்.
துலாம்:
நீதிமானாக திகழும் துலாம் ராசியினரை காக்கும் தெய்வமாக கிருஷ்ணர் இருக்கிறார். இவர்கள் கிருஷ்ணரின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நெருங்குவதில்லை.
விருச்சிகம்:
இவர்களை வழிநடத்தும் தெய்வமாக ஹனுமன் இருக்கிறார். இவர்கள் ஹனுமன் ஆலயம் சென்று வழிபாடு செய்து வந்தால் ஆபத்துகளில் இருந்து இவர்களை காக்கிறார்.
தனுசு:
பல இன்னல்களில் இருந்து இவர்களை காப்பாற்றும் தெய்வமாக மகா விஷ்ணு இருக்கிறார். இவர்கள் தொடர்ந்து விஷ்ணு வழிபாடு செய்து வந்தால் மன அமைதி கிடைக்கும்.
மகரம்:
இவர்களை ஹனுமன் எப்பொழுதும் உடன் நின்று காப்பாற்றுகிறார். இவர்கள் ஹனுமன் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மன தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்:
இவர்களை காக்கும் தெய்வமாக மகா காளியும் சனி பகவானும் இருக்கிறார்கள். இந்த இரு தெய்வங்களையும் பற்றிக்கொண்டால் இவர்களுக்கு துன்பமே இல்லை.
மீனம்:
இவர்களை வழிநடத்தும் கடவுளாக குருபகவான் இருக்கிறார். இவர்கள் வியாழக்கிழமை அன்று குருபகவானை வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |