குரு அஸ்தமனத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்- உங்க ராசியும் இருக்கா?
By DHUSHI
அறிவு மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படும் குரு மிதுன ராசியில் பயணம் செய்கிறது.
இதனால் ரிஷபம், சிம்மம், கும்பம், தனுசு உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்கு எதிர்மறை விளைவுகள் வரும் என ஜோதிட சாஸ்த்திரம் கூறுகிறது.
அதிலும் குறிப்பாக ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளில் குழப்பத்தையும் இது உண்டு பண்ணும் என்றும் நிபுணர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில், குரு அஸ்தமனத்தால் அவஸ்தைப்படப்போகும் 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் | குருவின் இந்த அஸ்தமனத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலையில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளது. வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதால் உங்களின் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியை சந்திக்கும். வருமானத்தின் ஆதாரங்களையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. பண உதவிகள் எங்கு கேட்டாலும் கிடைக்காது. இதனால் நீங்கள் அதிகமான மன உளைச்சலை சந்திக்கலாம். வியாபாரம் செய்யும் இடங்களில் பிரச்சினைகளும் ஏற்படும். கணவன் -மனைவி இருவருக்கும் நல்லதொரு தொடர்பு இருக்காது. |
சிம்மம் | மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனத்தால் வாழ்க்கையில் கடினமான சவால்கள் உருவாகும். இயல்பாக இருக்கும் இவர்கள் இந்த நாட்களில் அதிகமான கஷ்டங்கள் அனுபவிப்பார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு பாரிய பண சிக்கல்களில் சிக்கி கொள்ளலாம். நினைத்த காரியம் கையில் வந்து சேராது. உங்களின் மனத்திற்கு பிடித்த நபர், உங்களை விட்டு விலகி விடுவார். எதிர்காலம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு நிம்மதி இருக்காது. திருமண வாழ்க்கையில் பெரும் பிரச்சினைகள் இருக்கும். |
தனுசு | தனுசு ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை பார்ப்பார்கள். திருமண வாழ்வில் ஏற்படும் சண்டைகள் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். கூட்டாண்மையில் தொழில் செய்யம் நபர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் கணக்கு வழக்குகளில் வெளிப்படையாக இருப்பதன் மூலம், வரும் பிரச்சினைகளை சமாளிக்கலாம். சிவன்- பார்வதி வழிபாடு செய்து தண்ணீர் ஊற்றினால் இந்த பிரச்சினைகள் குறையும். |
கும்பம் | மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு கலவையான பலன்கள் தான் இருக்கும். கல்வி சார்ந்த வேலையில் இருப்பவர்களுக்கு சில நன்மைகள் இருக்கும். வியாபாரத்தில் லாபம் வருவதில் சில பிரச்சினைகள் வரலாம். தேவையற்ற செலவுகள் அதிகமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. வீடுகளில் இருக்கும் நகைக்கு அடகு கடைகளுக்கு செல்லலாம். புதிய ஒப்பந்தங்களை முடிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வீர்கள். பங்குச்சந்தையில் எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும். பிரச்சினைகளை சமாளிக்க போதியளவு நிதானம் அவசியம். யோகிகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளை சரிச் செய்து கொள்ளலாம். |
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |