குருவோடு விளையாடும் செவ்வாய்.பணத்தில் மிதக்கும் ராசிகள் யார் தெரியுமா?
ரிஷபம்
ரிஷப ராசி முதல் வீட்டில் செவ்வாய் சேர்க்கை நடக்க உள்ளது.அதனால் அந்த ராசியில் உள்ளவர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும்.
அதே சமயம் ஏதாவது ஒரு இடத்தில் பணம் அவர்கள் கொடுத்திருந்தால் அந்த பணமும் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளிடமிருந்து நல்ல பாராட்டுகளை பெறுவார்கள்.
சம்பள உயர்வு பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும். மற்றவர்கள் மத்தியில் மரியாதை மதிப்பு அதிகரிக்கும். நிதிநிலைகள் நல்ல மாற்றங்கள் நடந்து வருமானங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நடக்க உள்ளது. இதனால் அவர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நடக்கக்கூடும்.
குடும்பத்தினரால் நல்ல மாற்றங்கள் நடக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்தால் அது முற்றிலுமாக விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்கான சூழல் அமையும்.
பணியிடங்களில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாள் வழக்கில் இருந்த பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். பரம்பரை சொத்துகளில் ஏற்பட்டிருந்த சிக்கல் விலகும்.
கடகம்
கடக ராசிக்கு 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நடக்க உள்ளது அதனால் அவர்களுக்கு வருமானத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.நிதிநிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிகப்பெரிய அளவில் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்தி தேடி தருவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |