வீடு மங்களகரமாக இருக்க நாம் செய்ய வேண்டியவை
நம்முடைய வீடு மங்களமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை.ஆனால் அதற்கு நாம் நிறைய மெனக்கிட வேண்டும் என்று தான் நினைப்போம்.ஆனால் நாம் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே செய்யலாம்.
பொதுவாக நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றினால் வீடு மங்களகரமாக இருக்கும்.இருந்தாலும் உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சை பழத்தையும் போட்டு, வெட்டி வேரையும் சிறிதளவு அந்த தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அந்த வாசத்திற்கு நம்முடைய வீடு மிகவும் மங்களகரமாக இருக்கும்.
இந்த வாசத்தில் தான் மகா லட்சுமி நிரந்தரமாக குடி இருப்பாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். எலுமிச்சை பழத்தையும் மாற்ற வேண்டும். தண்ணீரில் இருக்கும் வேர் கெட்டுப் போக வாய்ப்பில்லை.
மாதத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.இப்படி செய்தால் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியும் விலகி நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |