'கோவிந்தா' என்று 10 லட்சம் முறை எழுதினால் கிடைக்கிறது விஐபி தரிசனம்
இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பலரும் பல்வேறு ஊர்களில் இருந்து சுவாமியை தரிசிக்க வரிசையில் காத்துநிற்கின்றனர். அப்படியாக, திருப்பதியில் எளிதாக விஐபி தரிசனம் செய்ய சில விஷயங்கள் செய்தால் போதும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
திருப்பதியில் விஐபி தரிசனம் என்பது எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடிய தரிசனம் இல்லை. அந்த வகையில் யார் ஒருவர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் விஐபி தரிசனம் எளிதாக பெறலாம் ஆனால் அவர்கள் அதற்கு ஒரு முக்கிய விஷயம் செய்ய வேண்டும் என்கிறது திருப்பதி தேவஸ்தானம்.
வளரும் தலைமுறைகளுக்கு ஆன்மீகத்தின் முக்கியத்துவம் எடுத்து சொல்லும் வகையிலும், சனாதன தர்மத்தை ஊக்குவிக்கவும், 'கோவிந்தா' என்ற பெயரை 10,01,116 முறை எழுதினால் அவர்களுக்கு விஐபி தரிசனம் கொடுக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த சவாலை முடித்து, பூர்த்தி செய்யப்பட்ட கோவிந்தகோடி புத்தகங்களை திருமலையில் உள்ள TTD பேஷ்கர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பவர்களுக்கு மறுநாள் விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது.
மேலும் மேற்கொண்டு ஒரு கோடி (1,00,00,000) 'கோவிந்த' நாமங்களை எழுதுபவர்களுக்கு அவர்களுக்கு மட்டும் அல்லாமல் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு TTD-யால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |