நம்முடைய முற்பிறவி ரகசியங்களை நாம் எப்படி தெரிந்து கொள்வது ?
இந்த பூமியில் இந்த பிறவி தான் கடைசி பிரிவு என்றும் இதற்கு முன்னதாக நாம் ஏதேனும் பிறவிகள் எடுத்திருக்கலாம் என்றும் நாம் ஆராய்ச்சிகள் மட்டும் தான் செய்யமுடியுமே தவிர்த்து எதையும் தீர்க்கமாக நம்மால் சொல்லிவிட முடியாது.
அதில் தான் பிரபஞ்சத்தினுடைய சக்தி நம்மை விட பெரியது என்று எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் பலரும் தங்களுடைய முற்பிறவியை பற்றி தெரிந்து கொள்வதற்கு மிகுந்த ஆவல் கொள்கிறார்கள்.
காரணம் ஜோதிடமாக இருக்கட்டும் வாழ்க்கையில் அனுபவிக்கக்கூடிய கர்ம வினைகளாக இருக்கட்டும் அவை முற்பிறவியில் இருந்து தொடரக்கூடிய ஒரு சங்கிலியாகவே பார்க்கப்படுகிறது.
ஆதலால் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிய கணக்குகளை கொண்டு இந்த பிறவியில் சில நன்மை தீமைகளை நாம் அவ்வப்போது அனுபவிக்க வேண்டிய நிலையும் இருந்து வருகிறது.
அப்படியாக, ஒருவர் முற்பிறவி ரகசியங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றியும் மனிதனுடைய வாழ்க்கையில் திருமணம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது என்றும் ஏன் திருமண தேதியை சரியாக தேர்ந்தெடுத்து மணமுடித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பல்வேறு முக்கிய மற்றும் சுவாரசிய எண் கணித தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.
அதை பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |