இன்றைய ராசி பலன் (13-03-2026)
மேஷம்:
இன்று உங்கள் நண்பர்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் விலகும் நாள். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் விலகும். கடனாக திரும்பி கொடுத்த பணத்தை வாங்குவீர்கள். வீட்டில் சந்தித்த பிரச்சனை விலகும்.
ரிஷபம்:
பணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். பெற்றோர்கள் உடல் நிலையில் இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் விலகும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மிதுனம்:
உங்கள் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரம் ரீதியாக உங்களுக்கு தொந்தரவுகள் செய்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
கடகம்:
குடும்பம் தொடர்பான நிறைய சிந்தனை மனதில் ஓடும். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் நாள்.
சிம்மம்:
அரசியல் தொடர்பாக சில எதிரிகள் வரலாம். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தாய் உடல் நிலையில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும் நாள்.
கன்னி:
திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். குழந்தைகளால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடுகள் செய்வீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.
துலாம்:
இன்று மனதில் குழப்பங்கள் விலகும் நாள். கோவில் வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் சந்தித்த பிரச்சனை விலகும். வாழ்க்கை துணையுடன் சற்று அமைதி காப்பது நல்லது. அத்தை வழி உறவுகளால் சில சங்கடத்தை சந்திப்பீர்கள். பொறுமை காக்க வேண்டிய நாள்.
தனுசு:
தாய் மாமன் வழியே இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.
மகரம்:
நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் உறவுகளிடம் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. சிலருக்கு மருத்துவ செலவுகள் வரலாம். வேலை பளு குறையும்.
கும்பம்:
வருமானத்தில் சந்தித்த தடைகள் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். நன்மையான நாள்.
மீனம்:
சிலருக்கு வழக்கு விஷயங்களில் இருந்து கஷ்டங்கள் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |