ஜாதக தோஷங்கள் விலக ஆடி செவ்வாய் அன்று வீட்டில் இதை செய்யுங்கள்

By Sakthi Raj Aug 06, 2024 05:26 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகமும் நம் வாழ்க்கையில் பல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் செவ்வாய் கிரகமானது ஒருவருக்கு உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை கொடுக்கும் கிரகமாகக் கருதப்படுகிறது.

ஆனால், ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அது வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக நம் ஜாதகத்தில் ஒரு சில தோஷங்கள் இருக்கிறது என்கின்றோம்.

அந்த தோஷம் என்பது ஜாதகத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட கிரக அமைப்பாகும். இந்த அமைப்பு, நம் வாழ்க்கையில் சில தடைகளை உண்டாக்க செய்யும்.

ஜாதக தோஷங்கள் விலக ஆடி செவ்வாய் அன்று வீட்டில் இதை செய்யுங்கள் | Jathaga Thosham Aadi Sevvai Valipadu

அப்படி தடை இருப்பவர்கள் ஆடி செவ்வாய் அன்று வழிபட வாழ்க்கையில் நல்லதோர் மாற்றம் உண்டாகும்.

மேலும் தோஷம் இருப்பவர்கள் வீட்டில் ஆடி செவ்வாய் அன்று பஞ்சதீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு இரண்டு விளக்குகளை ஏற்றி, சாம்பிராணி தூபம் போட வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் எல்லாம் விலகி நல்ல சக்திகள் தேடி வரும்.

அடுத்தபடியாக ஆடி செவ்வாயில் விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும். ஆனால் முழு தினமும் விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த தினத்தில் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம்.

இந்த மாதம் வரலக்ஷ்மி விரதம் எப்பொழுது தெரியுமா?

இந்த மாதம் வரலக்ஷ்மி விரதம் எப்பொழுது தெரியுமா?


இவ்வாறு செய்வதனினால் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் விலகி வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.

மேலும் சண்டை நிம்மதியின்மை போன்ற சூழலில் வாழும் குடும்பத்தில் அமைதி, செல்வம் மற்றும் மகிழ்ச்சி உண்டாகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

தீராத கடன் பிரச்சனைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். திருமண தடைப்பட்டு வந்தவர்களுக்கு திருமணம் கைகூடும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US