சனியின் வக்ர கதி: அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள் யார்?
ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் நீதி மானாக இருக்கிறார். மேலும், நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டு எடுத்துக்கொள்கிறார்.
தற்போது சனி மார்ச் 29 முதல் மீன ராசியில் பயணிக்கிறார். ஆனால் ஜூலையில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு வக்ரகதிக்குள் நுழையப் போகிறார். சனி வக்ரகதி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிக பெரிய ஏற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கடகம்:
கடக ராசிக்கு சனி ஒன்பதாம் இடத்தில் வக்ரகதி அடைகிறார். இதனால் இவர்களுக்கு தொழில் ரீதியாக பல்வேறு மாற்றமும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் எல்லாம் விலக உள்ளது. பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
கும்பம்:
கும்ப ராசியில் இரண்டாம் இடத்தில் சனி வக்ரகதியில் இருப்பதால் இவர்களுக்கு வாழ்க்கையில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்த வேலையை தொட்டாலும் அதில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி வக்ரகதியில் இருப்பதால் வியாபாரத்துறையில் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் யோகமும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |