எதிரிகள் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் காளி மந்திரம்

By Sakthi Raj Aug 04, 2024 10:07 AM GMT
Report

காளி என்றாலே உக்ரமானவள் என்றும் அவளை வழிபட பெரும்பாலும் அஞ்சுவார்கள்.இதற்கு காரணம் காளி தேவியின் உருவமும் கூட.

ஆனால் அவளை போல் நம்மை காப்பவள் இந்த உலகில் இல்லை.தாய்க்கு நிகரான அன்பு காட்டுவாள் மகாகாளி. தாய் போல பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை மட்டும் கொடுத்து நம்மை வழிநடத்துபவள்.

மேலும் இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் நல்ல எண்ணம், நல்ல பார்வை கொண்டவர்களாக இருப்பது இல்லை.

எதிரிகள் தொல்லையில் இருந்து நம்மை காக்கும் காளி மந்திரம் | Kali Devi Mantra Worship

அப்படி பட்ட மனிதர்களிடம் இருந்து தப்பிக்க நமக்கு காளி தேவி வழிபாடு உதவியாக இருக்கும்.

மேலும்,பிறர் மீது வஞ்சகம் கெட்ட எண்ணத்தில் பில்லி சூனியம் ஏவல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து காப்பாற்றுவாள் காளி.

மேலும் நாம் காளியின் இந்த மந்திரம் சொல்ல நம்முடைய கஷ்டம் எல்லாம் விலகும்.

மந்திரம்

ஓம் காளீ காளீ மகாகாளீ காளிகே பாப ஹாரிணி!
ஸர்வ துக்க ஹரே தேவி மாஹாகாளீ நமோஸ்துதே!!

ஞானம் வழங்கும் முருகனின் மந்திரம்

ஞானம் வழங்கும் முருகனின் மந்திரம்


இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். தினமும் பாராயணம் செய்ய இயலாதவர்கள் அஷ்டமி, அமாவாசை போன்ற தினங்களில் பாராயணம் செய்வது சிறப்பு.

இந்த மந்திரத்தை கூறும் பொழுது மகாகாளி ஆனவள் நம்முடனே வந்து இருந்து நமக்கு தைரியத்தை தந்து நமக்கு வரக்கூடிய கஷ்டங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவாள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US