இறக்கும் தருவாயில் கூட முக்தி தரும் பாடல்

By Sakthi Raj Apr 05, 2024 12:37 PM GMT
Report

நாம்  அனைவருக்கும் ஆன்மீகத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான நேரங்கள் நமக்கு கிடைப்பதில்லை.

இறக்கும் தருவாயில் கூட முக்தி தரும் பாடல் | Kanjimahaperiyava Pasuram Perumal

இருந்தாலும் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டாவது ஆன்மீக பலன்களை நாம் அறிய முற்படுவோம்.

அப்படி ஒரு சமயம் ஒருவர் ஒரு காஞ்சி மஹா பெரியவரிடம் தினமும் திவ்ய பிரபந்தம் முழுவதையும் படித்த பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என அந்த அன்பர் கேட்டார்.

அதற்கு மகா பெரியவர் இந்த பாசுரம் ஒன்று போதும் என 

குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு
கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.    

இந்த பாசுரம் ஒன்று போதும்.

இறக்கும் தருவாயில் கூட முக்தி தரும் பாடல் | Kanjimahaperiyava Pasuram Perumal

இதுவே திவ்யபிரபந்தத்தின் சாரம், திருமந்திரத்தின் அர்த்தம்.

ஆதலால் ஒருவர் இறக்கும் தருவாயில் கூட இந்த பாடலை .காதில் சொன்னாலே போதும் அவருக்கு முக்தி கிடைத்துவிடும். மேலும் இந்த பாடலை பாடியவர் ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்.

இறக்கும் தருவாயில் கூட முக்தி தரும் பாடல் | Kanjimahaperiyava Pasuram Perumal

இவர் வடக்கு முதல் தெற்கு வரை உள்ள வைணவ தலங்களை தரிசித்தவர். இவருடைய பாடல்களை எளிதில் புரியும் தன்மை உடையது . நாமும் இவருடைய பாடல்களை படித்தால் நலம் பெறலாம்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US