கஷ்டங்கள் தீர்க்கும் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன்

By பிரபா எஸ். ராஜேஷ் Jun 23, 2025 03:30 AM GMT
Report

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை நாயகி அம்மன் கோவில் உள்ளது. இது ஒரு தனிப்பெண் தெய்வக் கோவிலாகும். இக்கோவிலை விரிவாக்கிய போது இங்கு சரஸ்வதி, லட்சுமி போன்ற பல சந்நிதிகளும் உருவாக்கப்பட்டன. நாட்டுப்புறத் தெய்வமான கொப்புடைய நாயகி கோவிலில் அவளது உக்கிரத்தை குறைக்கும் வகையில் ஸ்ரீ சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்: பக்தி, வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் சங்கமம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்: பக்தி, வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் சங்கமம்

கொப்புடை நாயகி

கொப்பு என்பது காது மடலில் அணியும் ஒரு அணிகலனாகும். கொப்பு அணிந்த நாயகி கொப்புடைய நாயகி ஆவாள். நாயகி என்ற பெயர் நாயக்கர் காலத்தில் இருந்து பெண் தெய்வங்களுக்கும் பெண் அரசிகளுக்கும் உயர் குலப் பெண்களுக்கும் சூட்டப்பட்ட சிறப்புப் பெயராகும்.  

கொப்புடை நாயகி அம்மன் சிலை பஞ்சலோகத்தால் ஆனது. எனவே இச்சிலையின் மீது அபிஷேகம் செய்யப்படும் பால் மருத்துவக் குணங்கள் கொண்டதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் கொப்புடைய நாயகி அக்கினி மகுடம் அணிந்து நான்கு கைகளுடன் காட்சி தருகின்றாள்.

வலது கீழ்கரம் அபய ஹஸ்தமாக உள்ளது. இடது கீழ் கரத்தில் திரி சூலம் ஏந்தியுள்ளாள். மேல் இரு கரங்களில் பாசமும் கபாலமும் வைத்திருக்கிறாள்.

கஷ்டங்கள் தீர்க்கும் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் | Karaikudi Koppudai Nayaki Amman Temple

அக்கா தங்கை கதை

மற்ற பல ஊர்களில் சொல்லப்படும் அக்கா தங்கை கதைதான் கொப்புடைய நாயகிக்கும் சொல்லப்படுகிறது. காளியம்மன் மாரியம்மனுக்கும் பல ஊர்களில் இதே கதை சொல்லப்படுகிறது.   காடம்மன், கொப்புடைய நாயகி என்று பெயரில் அக்கா தங்கை இருவர் இருந்தனர். இவர்களில் அக்காவுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தன. தங்கைக்கு பிள்ளை எதுவும் பிறக்கவில்லை.

இந்நிலையில் தங்கை கொப்புடைய நாயகி தன் அக்கா பிள்ளைகளைப் பார்க்க பலகாரங்கள் செய்து கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் அக்காளுக்கு மலடியான தன் தங்கை தன் பிள்ளைகளை பார்ப்பதால் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தாள்.  14ஆம் நூற்றாண்டுக்கு பிறகு மலடி, விதவை, வாழாவெட்டி என்று பெண்களை இழிவு செய்யும் மூட நம்பிக்கைகள் தமிழகத்தில் பெருகிவிட்டன. 

இதனைக் கண்டிக்கும் வகையில் இக்கதை அமைந்துள்ளது.   காடம்மா தன் தங்கை கொப்புடைய நாயகி வந்தபோது பிள்ளைகளைக் காணவில்லை என்று சொல்லிவிட்டாள்.  அக்காளின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட தங்கை கொப்புடைய நாயகி  தன் நிலையை நினைத்து அழுது கொண்டே திரும்பிப் போய்விட்டாள். 

அவள் போன பின்பு காடம்மா தன் பிள்ளைகளைத் தேடிப் போனாள். அவள் பிள்ளைகள் கல்லாய் மாறியிருந்தனர்.   காடம்மா கண்ணீருடன் கொப்புடை நாயகியைத் தேடிப் போய் மன்னிப்பு கேட்டாள். தன் பிள்ளைகளை உயிரோடு வரச் செய்யும்படி வேண்டினாள்.

தங்கை அந்த கற்களின் மீது தண்ணீர் தெளிக்கவும் குழந்தைகள் ஏழு பெரும்  உயிர் பெற்று வந்தனர். இக்கதை தமிழ்நாட்டில் பல பெண் தெய்வ கோவில்களிலும் சொல்லப்படுகின்ற ஒரு பொதுவான கதையாகும்.

தென்னிந்தியாவில் மிக உயரமான கோபுரங்கள் கொண்ட டாப் 20 கோயில்கள்

தென்னிந்தியாவில் மிக உயரமான கோபுரங்கள் கொண்ட டாப் 20 கோயில்கள்

சித்திரைப் பெருந்திருவிழா

கொப்புடைய நாயகிக்கு சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.  நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்பத்தினர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சித்திரை மாதத்தின் கடைசி செவ்வாய் என்று நடைபெறும் செவ்வாய் பெருந்திருவிழாவுக்கு காரைக்குடிக்கு வருவார்கள்.

பூர்வீக வீட்டிற்கு வந்து தங்கி இருந்து பொங்கல் வைத்து அம்மனை வணங்கி அருள் பெற்றுச் செல்வார்கள். சித்திரைப் பெருந்திருவிழா சித்திரை கடைசி வெள்ளி முதல் வைகாசி முதல் வாரம் முடிய 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

கஷ்டங்கள் தீர்க்கும் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் | Karaikudi Koppudai Nayaki Amman Temple

பூச் சொரிதல்

சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய்க்கிழமைகள் மட்டும் வந்தால் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று பூச்சொரிதல் நடைபெறும். சித்திரையில்  ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வந்தால் மூன்றாவது செவ்வாய்க்கிழமை அன்று பூச்சொரிதல் நடைபெறும்.  

பூச்சொரிதல் விழா அன்று இப்பகுதி வாழ் பெண்கள் பெரிய பெரிய தாம்பாளங்களில் பூக்களைச் சுமந்து கொண்டு வந்து அம்மனுக்குக் காணிக்கை ஆக்குகின்றனர். அன்று அவள் மீது சொரியப்படும் மலர்கள் அளவுக்கு அவளது சிலையை மூடிவிடும் அளவுக்கு குவிந்து விடும். மலர்கள் நிறைய குவிய குவிய பூசாரி அவற்றை அப்புறப்படுத்திக் கொண்டே இருப்பார். அன்று முழுக்க கொப்புடைய நாயகி மலர்க் குவியலில் காட்சி தருவாள்.  

கோயில் வழிபாடுகள்

கொப்படை நாயகி அம்மன் கோவிலில் சித்திரை வருடப் பிறப்பு, செவ்வாய்க் கிழமை சிறப்பு வழிபாடு, ஆடி மாதம் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி விழா, பங்குனியில் தாராபிஷேகம் என்று மாதந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

எல்லா மாதங்களிலும் ஞாயிறு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் இக்கோவிலில் மிகுதியாகக் காணப்படும்.  

அதிகாலை ஆறு மணிக்கு திறக்கப்படும் கோவில் பகல் 11 வரை மணி வரையிலும் மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.  

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

திருமணத்தடை நீக்கும் திட்டக்குடி வைத்தியநாதர் கோவில்

கோயில் அமைப்பு

கொப்புடை நாயகி அம்மன் கோவிலில் மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கொப்புடை நாயகிக்கு தனி சந்நிதி உள்ளது. இங்குக் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசாமி குதிரை மீது அமர்ந்துள்ளார். அவருக்கு வலதுபுறத்தில் முருகன் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கின்றார்.

கன்னி மூலையில் கணபதி தனிச்சன்னதி கொண்டுள்ளார். மேலும் காசிவிசாலாட்சி, விஸ்வநாதர், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் எழுப்பப்பட்டுள்ளன. தனி அம்மன் கோயிலில் சிவன் கோயிலில் இருக்கும் திருச் சுற்று தெய்வங்ளை நிறுவி அவற்றுக்கு  தனிச் சந்நிதிகள் ஏற்படுத்தும் சமயமரபு இக்கோவிலிலும் பின்பற்றப்பட்டுள்ளது.  

கஷ்டங்கள் தீர்க்கும் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் | Karaikudi Koppudai Nayaki Amman Temple

குடி தெய்வம்

இக்கோவில் இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டின் கீழிருந்தாலும்  நாட்டுக்கோட்டை செட்டியார்களே அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். இத்தெய்வம் அவர்களின் குடி தெய்வமாக (clan deity) விளங்குகிறது. காரைக்குடியில் வாழும் வணிக சமூகத்தினர் இக்கோவிலுக்கு வந்து தங்கள் கடை சாவியை அம்மன் காலடியில் வைத்து எடுத்துச் செல்கின்றனர்.

தேர்த் திருவிழா

கொப்புடை நாயகி திருவிழா காலங்களில் மட்டுமே உற்சவ நாயகியாக பத்து நாட்கள் கோயிலை விட்டு  வெளியே கொண்டு வரப்படுவாள். இக்கோயிலில் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தம். இக்கோவிலில் உள்ள தேர் உறுதியான பனை மரத்தால் செய்யப்பட்டது. தேரின் உறுப்புகளை இணைத்துக் கட்டி இருக்கும் நார் தைலான் கொடி நாராகும். இவ்வகை கட்டுமானத்தால் மற்ற கோவில் தேர்களில் இருந்து இத்தேர் வேறுபட்டதும் உறுதியானதும் ஆகும்.  

அக்காவைத் தேடி

 கதையில் அக்கா தன் பிள்ளைகளை உயிர்ப்பித்துத் தரும்படி கேட்க அக்கா தங்கையைத் தேடி வருகிறாள். ஆனால்  எட்டாவது நாள் திருவிழாவின்போது கொப்புடைய நாயகியம்மனின் தேர் ஒரு கால்வாயை கடந்து காட்டம்மாவின் கோவிலுக்குச் செல்கிறது.  இவ்வாறு கால்வாயைக் கடந்து செல்வதால் உறுதியான தேர் தேவைப்பட்டது. எனவே பனைமரச் சட்டங்களைக்  கொண்டு தேர் செய்துள்ளனர்.  

காட்டம்மன் கதை

கொப்புடைய நாயகியின் சகோதிரியான காட்டம்மனுக்கும் ஒரு கதை இங்கு வழங்குகின்றது. காட்டம்மா தேவியை ஒரு மன்னன் வெகு காலம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வந்தான். ஒரு கஷ்ட காலத்தில் அவன் தன் ஊரை விட்டு வெளியேற வேண்டி இருந்ததால் காட்டம்மா சிலையை ஒரு வேப்ப மரத்தில் மறைத்து வைத்து விட்டுச் சென்று விட்டான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வழியாக மாடு மேய்ப்பவர்கள் அந்த விக்ரகத்தைக் கண்டுபிடித்தனர். பின்பு அதனை மகிழ மரத்தில் அடியில் வைத்து கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர். கொப்புடைய நாயகி பத்து நாள் திருவிழாவில் ஒரு நாள் மட்டும் (எட்டாம் நாள்) தன் அக்காளின் கோவிலுக்குச் சென்று வருவாள்.  

வழிபாட்டின் பலன்

கொப்புடைய நாயகி தாயுள்ளத்துடன் தன்னை நாடி வரும் பக்தர்களின் அனைத்துத் துயரங்களையும் தீர்த்து அவர்களுக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் அளிக்கின்றாள். எனவே காரைக்குடி பகுதியில் வாழ்பவர்களும் இங்கு பிறந்து வளர்ந்தவர்களும் இதனைச் சொந்த ஊராகக் கொண்ட கொண்டு மற்ற பகுதிகளில் வாழ்கின்றவர்களும் கொப்புடைய நாயகி அம்மனை தமது முதல் தெய்வமாகக் கொண்டு வணங்கி பெருநலம் பெறுகின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US